விக்னேஷ்.. கலாம்..   (விக்னேஷ் கலாம்...)
215 Followers · 173 Following

Joined 20 August 2018


Joined 20 August 2018

••சிற்பமாக இருப்பதுவும்
இவன் தானோ••
சிலரின் கதைகளில்
அற்பமாய்த் தெரிவதுவும்
இவன் தானோ••

சிலரது கதைகளில்
கதைமாந்தரும் இவன் தானோ••
கதைகளைப் புனைவதுவே
தீராக் காதலாய்க் கொண்ட
கதாசிரியனும் இவன் தானோ•••!

-



•••அவ்வளவு வேகமான
மனக்கோர்வையில் பொதிந்த
வார்த்தை முத்துக்களை
சேர்ந்து கோர்த்துவைத்து
அன்புமொழி பேசுகையில்
நீயும் நானும் வேறல்ல•••!
ஒன்றிய சிந்தையில்
இரண்டறக் கலந்த என்அன்பே••!

-



•••இலக்கற்ற பயணியாய்
இன்னது வேண்டுமென்ற
ஆசையாவும் துறந்து
பற்றற்ற மனத்தொடு
இயற்கையின் மடியினில்
இசையோடு இயைந்து
இல்லாளின் துணையுடன்
இருகரம் வீசிநடந்து
வையகம் முழுவதும்
சுற்றித் திரியும் போக்கில்
கனா ஒன்று கண்டேனடி•••!

-



•••படபடவென்று பேசித்
தீர்த்திடும் அவளின்
அப்பழுக்கற்ற உள்ளன்பின்
ஆழமறிந்து உள்ளூர
மனம் துடிதுடித்ததுவே••!

படபடக்கும் கண்ணசைவும்
ஆயிரம் அர்த்தங்களை
சொல்லாமல் உணர்த்திடுதே••!

செல்லப் பேச்சும்
கள்ளப் பார்வையும்
கொல்லாமல் குளிர்விக்குதே••!

-



••திட்டித் தீராத நம்பிக்கையும்
வாழ்ந்து பார்க்கும் நெஞ்சுரமும்••
தேடித் தேடிச் சேர்த்தது
அவள் பார்த்த கண்காட்சியில்
வாங்க வியலாத பெட்டகமொன்று••
தேடித் தேடிச் சேர்த்தது
போகிற போக்கில் கிடைத்த
ஞாபகப் பறவையின் சில எச்சங்கள்•••!

-



மௌனத்தைக் கற்கும் வரை•••

மனம் வசப்படாது போகுமே••!
வார்த்தைகள் படபடக்குமே••!!
திண்ணிய நெஞ்சகத்தின்
வலிமையுந்தான் விளங்கிடுமோ••
ஆழ்மனதின் ஆற்றலும்
பொருள்படவே பெருகிடுமோ••!
மௌனம் கற்கப் பழகிடுவாய்
எந்தன் மென் மனமே••!

-



•••உன் பெயரில்லாமல்
என் வாழ்விருக்காது••
உன் பெயரில்லாமல்
எந்தன் நினைவிருக்காது••
உன் பெயரில்லாமல்
எந்தன் மனம் துடிக்காது••
உன் பெயரில்லாமல்
ஞாபகங்கள் எனக்கேது••
உன் பெயரில்லாமல்
வசந்த காலமும் வாடைக் காற்றும்
ஒருபோதும் இருந்திராது•••!

-



•••மனம் கலங்கும் போதும்
முடிவில் இடறிய போதும்
நெஞ்சம் தளரும் போதும்
நம்பிக்கை உடைதலிலும்
கனவுகளின் நீட்சிப்பொழுதிலும்

-



என்ன இருக்கிறது
இந்த வாழ்வில்•••

•••இதுவரை பார்த்திராத
எல்லையற்ற நீள்வானம்••
ஏராளமான பறவையினங்கள்••
எண்ணிலடங்கா காடுகளும் மலைகளும்••
பறிக்கப்படாத பல்வண்ண மலர்கள்••
பார்த்துத் தீராத இயற்கை வனப்பு••
பொருளற்ற இவ்வுலகிலே
பொருள்பொதிந்த சில பயணக்குறிப்புகள்••

-



•••வார்த்தைகளைக் கூறிட்டு
விற்றுத் தீர்த்து வந்தேன்••
மௌனியாக மாறிய பின்னும்
மொழியின்றி உணர்வறிந்தேன்••
மனமறியா மாணவனுக்குத் தானே
வார்த்தையும் விளக்கமும்
தேவையுற நேர்கிறது•••!

-


Fetching விக்னேஷ்.. கலாம்.. Quotes