மழைமேகமும்
மஞ்சள் வானமும்
மனிதர்கள்
நிரம்பிய
சாலைகளும்
மனதிற்கினிய
நினைவுகளில்
முழுமையாய்
கிரகித்துக்
கொள்கின்றன!-
உன்னைக்
காணும்
ஒவ்வொரு
நொடியிலும்
ஆழமாக
உருகியோடுகிறது
அன்பின்
வாசங்கள்
நினைவுகளென.
நிலவே!
நீயும் அன்பு தானோ?!!-
மகனி்ன்
சரிபாதியை
கண்டெடுத்த
போதிலும்
அவன்
உண்ணும்
ஒவ்வொரு
வேளையிலும்
'நல்லா சாப்பிடு பா'
என்னும்
உணர்வில்
தாய்மை
மாறாதிருக்கிறாள்!
-
இப்புவியின்
மாயைக்குள்
இலகுவாக
தன்னை உட்படுத்தி
வாழும் ஏனைய
ஜீவன்களினும்
ஏனோ!
மனிதப்பிறவி
சிக்கித் திணறும்
பிறப்பாகிப்
போயிற்றே!!-
அகண்ட வானம்
இருண்ட மழைமேகம்
மலை தொட்டு
கீழிறங்கும்
அந்தி பொழுதின்
மாய இருள்
பிரளயத்தின்
முன்மாதிரியாக
பயங்கரம்
கொள்கிறது
மனதின் ஆழத்தில்.-
துடிக்க மறந்த
அவனின் இதயம்
சற்றே
உயிர் பெற்றது
அவளின்
மெல்லிய
புன்னகையில!-
ஆளில்லா
வீதிகளில் ஔிரும்
தெருவிளக்குகளின்
வெளிச்சத்தைக்
காட்டிலும்
நிழலாடும்
இருளின் பிரகாசம்
பரவசமூட்டுகிறது
மனதை!-
மனதின் இருள்
என் புலன்களை
கபளீகரம் செய்யும்
ஒவ்வொரு வேளையும்
பகலின் வெளிச்சம்
தரும் நம்பிக்கையை
இறுகப் பற்ற
கதிரவன் நீங்கா
பூலோகம்
வேண்டுகிறேன்!!-
தொலைதூரத்து நிலவோ நீ?!
இதுவரை தூரங்களின் தூதுவனாய்
கவிகளில் வலம் வந்தாய்!
இன்று பல்லாயிரக் கணக்கானோரின்
இதயத்தில் குடியமர்ந்து விட்டாய்
எம் பாரத தேசத்தின்
சந்திரயான் உன்னில்
மென்மையாய் தரையிறங்கிய
நொடிப் பொழுதில்!!-
Let our spirit sync in
with our Mother Earth
as she begins
her next round of revolution
around the Sun
who is the ultimate source
of light and hope for lives!
Happy New Year 2023 🎉-