Death
-Is celebrated in some households
-Is grieved in some homes
-Is laughed amongst some people
-Is empathized at some untoward losses
whether
-a hero or a villain?!!
Death
-Is the Ruler of lives.-
Too many people,
too many incidences,
too many memories
but a too little heart!!-
மழைமேகமும்
மஞ்சள் வானமும்
மனிதர்கள்
நிரம்பிய
சாலைகளும்
மனதிற்கினிய
நினைவுகளில்
முழுமையாய்
கிரகித்துக்
கொள்கின்றன!-
உன்னைக்
காணும்
ஒவ்வொரு
நொடியிலும்
ஆழமாக
உருகியோடுகிறது
அன்பின்
வாசங்கள்
நினைவுகளென.
நிலவே!
நீயும் அன்பு தானோ?!!-
மகனி்ன்
சரிபாதியை
கண்டெடுத்த
போதிலும்
அவன்
உண்ணும்
ஒவ்வொரு
வேளையிலும்
'நல்லா சாப்பிடு பா'
என்னும்
உணர்வில்
தாய்மை
மாறாதிருக்கிறாள்!
-
இப்புவியின்
மாயைக்குள்
இலகுவாக
தன்னை உட்படுத்தி
வாழும் ஏனைய
ஜீவன்களினும்
ஏனோ!
மனிதப்பிறவி
சிக்கித் திணறும்
பிறப்பாகிப்
போயிற்றே!!-
அகண்ட வானம்
இருண்ட மழைமேகம்
மலை தொட்டு
கீழிறங்கும்
அந்தி பொழுதின்
மாய இருள்
பிரளயத்தின்
முன்மாதிரியாக
பயங்கரம்
கொள்கிறது
மனதின் ஆழத்தில்.-
துடிக்க மறந்த
அவனின் இதயம்
சற்றே
உயிர் பெற்றது
அவளின்
மெல்லிய
புன்னகையில!-
ஆளில்லா
வீதிகளில் ஔிரும்
தெருவிளக்குகளின்
வெளிச்சத்தைக்
காட்டிலும்
நிழலாடும்
இருளின் பிரகாசம்
பரவசமூட்டுகிறது
மனதை!-
மனதின் இருள்
என் புலன்களை
கபளீகரம் செய்யும்
ஒவ்வொரு வேளையும்
பகலின் வெளிச்சம்
தரும் நம்பிக்கையை
இறுகப் பற்ற
கதிரவன் நீங்கா
பூலோகம்
வேண்டுகிறேன்!!-