Venkatesh   (Venkatesh)
330 Followers · 60 Following

read more
Joined 3 June 2020


read more
Joined 3 June 2020
14 MAY AT 21:42

When I see your gazelle eyes
which bloom under the veiled moon,
why am I then averting them?
When I see your gazelle eyes,
It's because they cast a spell on me.

When I see your velvety cheeks
why do they turn florid like a rose?
in the zephyr, moments of repose,
When I see your velvety cheeks,
It's because I'm sensing a smouldering.

When I see your ravishing lips
why do they open like buds,
bursting flowers, wet and lustrous,
When I see your ravishing lips,
It's because I'm swooning over them.

When I see your vivacious visage
which leaves until next winter,
why does my soul suffer angst?
When I see your vivacious visage,
It's because I'm thinking of my exile.

-


14 MAY AT 15:00

கருநீல வானம்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை..
அதிலே வட்டமாய் வெள்ளி நிலவு
மெதுவாய் மிதந்து கொண்டே..
நெடிதுயர்ந்த வரையும்
மரகதத் தருக்களை இதமாய்க்
குளிருக்குப் போர்த்தியபடி..
மென்பனி மேகங்கள்
அதன் தூளியிலே துஞ்சியபடி..
தண்மதியின் வெளிச்சத்திலே
தன் மதியும் சற்றே மயங்கிட
முப்பொழுதும் மறக்கிறேன்
இயற்கையின் பேரெழில் பருகியே !

-


14 MAY AT 6:44

காகித கப்பலில்
கரை போய் சேந்திடலாம்..
காதலில் ஒரு நாள்
நீயுந்தான் ஜெயிச்சிடலாம்..
ஓ..ஓஓஓ
அக்கரைக்கும் இக்கரை
எப்பொழுதும் பச்சை தான்..

-


13 MAY AT 13:36

பரிந்து பேசி என்ன நேர்ந்திடப் போகிறது..
புரிந்தவள்.. காதல் புரிந்தவள்..
பிரிந்து சென்ற பின்னே !

-


12 MAY AT 8:54

அஞ்ச மனம் செய்யுதடி..
கொஞ்சம் அஞ்ச மனம் செய்யுதடி..
அஞ்சனத்தை அழகாய் நீ தீட்டுகையிலே !
எங்கே உந்தன் விழிகள் வகுக்கும் வியூகத்தில்
தப்பிக்க வழியின்றி திட்டமாய்த் தான்
தனியே அகப்பட்டுக் கொள்வேனோ என்றே !

-


29 APR AT 13:25

இலகுவானது இறகின் நெஞ்சம்,
நெகிழ்ச்சியில் மேலும் கொஞ்சம்..
உதிர்ந்த பின்னும் தன்னை
அன்பாய் ஆதரவாய்த் தூக்கிச் செல்லும்
காற்றின் அரவணைப்பினை எண்ணி !

-


28 APR AT 11:40

கூந்தல் மேகத்தில்
மழை வருமோ..
ஒதுங்கிக் கொள்கிறேனடி
கோலமயிலே..
சற்றே உந்தன்
காதணிக் குடைக்குள் !

-


28 APR AT 11:07

வாளிப்பாய் தேகத்தில்
கட்டழகு வனப்பும்
கனிவாய் கவிழ்ந்து சிரிக்க
காட்டருவியாய் துள்ளுதடி
கட்டுப்பாடின்றித் தான்
இந்த கள்வனின் மனமும் !

-


27 APR AT 20:24

இப்படி என்னை வீழ்த்துமென்று
தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்
உந்தன் கண்களுக்கு.. ஆனாலும்
பின்னே மறைந்திருக்கும் குறுநகையே
சொல்கிறதேயடி அந்த சூட்சுமத்தையும் !

-


27 APR AT 13:20

நினை நினைந்திருப்பது
அனிச்சைச் செயலான பின்னே
அனிச்சமாய் ஆனேனடி அன்னமே..
நீயின்றி நானும்
தன்னந் தனியாய்த் தவிக்கையிலே
நாளும் !

-


Fetching Venkatesh Quotes