Venkatakrishnan V  
69 Followers · 14 Following

read more
Joined 28 October 2017


read more
Joined 28 October 2017
28 JUN AT 8:08

கவலையும்
சந்தோஷமும்
நிலைப்பதில்லை
நீ அதில் நீடித்திருந்தால்
வாழ்க்கையில் பிறழ்வாய்..
கடந்து விடு..
நிறைய மீதமுள்ளது..

#வாழ்க்கை

-


24 JUN AT 7:57

ஏற்றமில்லை, இறக்கமில்லை —
அதுவே வாழ்வின் ஓரமில்லையே.
ஏக்கமின்றி, இசைவின்றி,
நாள்கள் ஓர் நிழலாய்ச் செல்கின்றனவே.

இல்லாமல் போனால் இவை எல்லாம்!
இயல்பாய் நின்றது எதுவுமே இல்லையே!


---

-


23 JUN AT 7:42

எதிர்பார்ப்பது
குறைந்த பட்ச தேவை!
எதிரில் பார்ப்பதோ
உட்ச பட்சம்..!?
இதனிடையில்
கடந்து செல்லும்
மனிதனின் மனம்,
மறந்து சொல்லும்
அடுத்த என்னவென..?!

#வாழ்க்கை

-


17 JUN AT 22:38



ஒருவன் இன்னொருவனை
கண்டால் – கேலி செய்கின்றான்,
அவனையே சொல்லிக் கொண்டால் –
பழி ஏறும் பாவமாம்.

இது இயற்கைதான்...
அதை நீ கடந்துச் செல் –
ஏனெனில்... யாருமே
முழுமையான யோக்கியர் இல்லை!

-


15 JUN AT 18:30


வாழ்க்கை யாருக்காக?

மற்றவர்களின் ஆசையை நிறைவேற்ற
நீ உன்னை மறக்க வேண்டாம்...
அவர்கள் சந்தோஷத்தில்
நீயும் ஒளியலாம்,
ஆனால் உன் கனவுகள்
தூசிபடத் தகுதியில்லை!

நின் விருப்பங்கள்
விண்ணப்பம் போல் ஒதுக்கி வைக்கப்பட்டாலும்,
அவை நிராகரிக்கப்படாத கனவுகள் –
நீ மட்டும் துணிந்தால், நிஜமாகும்!



-


8 JUN AT 22:06

அன்பின் விலை என்னவென
கேட்கும் சிலருக்கு தெரியாது
உண்மையான அன்பிற்கு
விலையேதுமில்லையென.
தேவையின் அன்பு
தேவையோடே முடியும்..
முடிவோடு அறிவாய்
நிஜத்தை..

-


8 JUN AT 20:54

அகங்காரத்தால் ஏதும் நிலைக்காது..
அதிகாரத்தால் ஏதும் கிடைக்காது..
உன் நிலை உயர்வு என
நினைத்து விடாதே..
உயர்வின் பின் தாழ்வும் உண்டு என்பதனை அறிவினில் கொள்..
சமநிலையாற்று...
சரிசமாய்..

-


5 JUN AT 16:34



நின் தேவையறிந்து செயல்படு, தேவையில்லாமல்
தோன்றியவை தூக்கிவிடு — தாழ்வதற்கு நேரமில்லை.
நேர்மை உனது நெஞ்சில் நின்றிருக்க வேண்டும்;
நினைவில் உனை நம்பும் உலகம் இருக்கிறது.

-


15 MAY AT 17:07



பார்வையோசை

நீ யாரென்று அறியும் வரை
அடுத்தவர்களின் பார்வையாளனே...
வாசலில் நிற்கும் நிழலென
வாழ்வின் விளக்கில் நீயின்றி.

அவர்கள் சொல்வதிலேதான் உண்மை,
அவர்கள் தாண்டாதே அந்த கண்கள்.
நீயே உன்னைத் தொட்ட பிறகு
தான் தெரியும் – நீ தான் அந்த ஒளி!



-


11 MAY AT 10:52

எழுதி மாளாத சொல்..
எதிலும் மாறாத கனல்..
எங்கும் உடனாக தோன்றும் நிஜம்..
எப்போதும் உடனே ஏங்கும் நிழல்..
அன்பு எனும் சொல்லின் ஆதி..
அவளே அனைவருக்கும் சாமி....

அம்மா

-


Fetching Venkatakrishnan V Quotes