அறிவு வளர்ச்சியும் முதிர்ச்சியும் அடைந்த பின் கொடுமையை எதிர்த்து கிளர்ச்சி செய்தால் சமூகம் அதிர்ச்சியோடு பார்க்கிறதே இந்த பூனையா என்று, உணர்ச்சியற்றவன் தான் இந்த வாழ்க்கை சுழற்ச்சியை முழுவதுமாக வாழமுடியுமோ
எப்போது மனதை விட்டு நான் என்ற அகந்தை அழிந்து, எதிர்பார்ப்புகள் முற்றிலும் ஒலிந்து, கணக்குகள் அனைத்தும் கழிந்து, பின் அவன் காட்சி எப்போது பொன்னம்பலத்தில் மிளர்ந்து முற்றிலும் விடைபெறுவேனோ🥺
எப்போது உண்மை உணர்ந்து, தன்னை அறிந்து, இன்ப துன்பங்களை மறந்து பிறவியின் பயனை அடைந்து, மறுபிறவியின் சங்கிலி அறுந்து முக்தி பெறுவேனோ விடை கூறும் ஈஸ்வரா 😟
From a far distance looking at u... Small small jumps came towards u... Magical tricks from ur face your funny talks mesmerised me to say love to u♥️♥️♥️
வெகு தொலைவிலிருந்து உத்து பார்க்கையில்.., துள்ளி துள்ளி ஓடி உன் அருகில் வந்து நிற்கையில்... உன் முகத்தில் இருக்கும் ஏதோ ஓர் மாயத்தால் என்னை வசியம் செய்து உன்னிடம் காதலைப் பொழியவைக்கிறாய்!!!❤️
தன் மகத்தான ஒளி வீசி ஓரறிவு தாவரத்தின் பசி தீர்த்த சூரியனுக்கு ஒரு பிடி அரிசி காணிக்கையும் விளைச்சலுக்கு துணைபுரிந்த கால்நடைகளை அழகுபடுத்தி வேடிக்கை பார்க்கும் இந்த நாளை மகிழ்வோடு கொண்டாடுவோம்🥰
அவள் ஒரு இலக்கிய சோலை பருக பருக தித்திக்கும், அவளை கண்டால் மனம் உருக உருக காதலிக்கும், அவளை ரசித்த பின் இனிப்புகள் கூட சிறுக சிறுக தான் இனிக்கும், பின் கரங்கள் அவளை இறுக பற்றி கொள்ள துடிக்கும்...