வெங்கடேஷ் ஊத்தங்கரை   (க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.)
2 Followers 0 Following

கவித்தென்றல் வெங்கட்.
Joined 26 July 2019


கவித்தென்றல் வெங்கட்.
Joined 26 July 2019

இங்கு வழங்கப்படும் அறிவுரை அத்தனையும்
அவர் அவரின் தனிப்பட்ட பட்டறிவு மட்டுமே
அவை உனக்கு அப்படியே பொருந்துவது போலவே
தான் தோன்றும்
ஆனால் இல்லை..
அதுவே நிதர்சனம்

உன் சூழல் வேறு
அவரின் கடந்த சூழல் வேறு..
உனக்காய் தோன்றும்,
ஓர் அறிவு அவ்வப்போது
அதனை கேட்டுவைத்த
பட்டறிவுடன் பகுத்து
புரிந்து நட...
உந்தன் வாழ்வு தனிப்பட்டது
நீயே நடத்திவிடு அதனை.....

-



உன்னை போல் தான்
இங்கே வலிகள்
ஆயிரம், லட்சங்கள்
இங்கே அனைவருமே அழ நினைத்தால்
கண்ணீரை சேமிக்க குளங்கள்
போதாது...
உந்தன் வலிகள் வெளியில்
தெரிய அவசியம் ஏதுமே
இல்லை தானே...
பின் ஏன் இந்த வீன்
புலம்பல்கள் ...
கடக்க பழகு ...
ஏற்க பழகு....
நகர தொடங்கு....

-



காயப்பட்டாலும் சரி
கலங்கி நின்றாலும் சரி
கடந்துவிடு....
கடக்காவிட்டடால்
கசங்கிய
காகிதம் போல தான்
காலில் விழுந்து மிதியுடனே
காலம்
கடக்க நேரிடும்......

-



சாடி நிற்காதே ... சார்ந்தும் நிற்காதே.....
ஊர்ந்தும் நட.. .உழன்றும் நட ...
குழன்றும் பேசு.... சுழன்றும் திரி.....
ஆற்றல் சேமி... ஆறும் கடக்கும்....
அறுபதும் கடக்கும்... இன்னல் இனிது....
இனிதும் இனிதே...
கோரமும் ரசி...அகோரமும் ரசி...
வாசம் நேசி.... முதுமையும் யோசி....
இருக்கும் இடமும் நலமே...
நடக்கும் செயலும் நலமே...
நினைப்பவை நடக்கும்...
நினைத்தும் கிடைக்கும்....
எழிலும் பேசு....இன்ப முகமும் வீசு.............

-



திக்குத் தெரியாத ஓர் அடர்வனமொன்றில் தடம் அறிந்து ,
இடம் யாவும் பார்த்து ரசித்து ,
கிடைக்கும் இயற்கையை நுகர்ந்து சுவைத்து,
ஆர்ப்பரிக்கும் எழிலை எங்கேயும்
சிந்திடாத காட்டாற்றின் தேனருந்தி,
இசைமயக்கத்தின் சாயலில்
சாரல் தென்றலினால் போதை ஏறி ......
ஓர் நாளேனும் எதையுமே
காணாது குருடனாய்
அலைந்து தொலைந்து மடிய வேண்டும் ...

-



விரும்பிய யாவும் கிடைத்திடும்
என்றால் இங்கு கனவுகளே இல்லை..
விரும்பியன கிடைத்தாலும் சரி
கிடைக்காவிடினும் சரி
கிடைக்கும் பொழுது கிடைக்கட்டும்
எனும் மனமும் ‌....
கிடைத்ததை ஏற்கும்
மனமுமே இங்கே அதிகம்
தேவை.....
தேவைகளையே தேடி தேடி
தேயாமல்
கிடைப்பது எதுவாயினும்
அதனை கொண்டு முன்செல்ல
முயல்வோம்..........

-



காலமது கடக்க யாவும் கடந்திடும்..... கண்ட காட்சிகளும் கடக்கும்....... கவலையும் கடக்கும்........ கடந்தவையின் நினைவுகளும் கடக்கும்..... காயமதும் கடக்கும்........... கலங்கியனவும் கடக்கும்............. கனவுகளும் கடக்கும்....................
காளை பருவமும் கடக்கும் .........
கொண்ட காதலும் கடக்கும்.......

காலத்தின் விடைதனை மட்டும் கடந்திடுதல் தான் கடந்திடாதது..........

-



தேவையின் பொழுது
கிடைக்கப்பெறாதனவை...
மீண்டும் மீண்டும்
கிடைக்கப்பெற்றாலும்
கூட பயனொன்றும்
இல்லை.....
அஃது எதுவாயினும் சரி.........

-



வாழ்வில் சில தருணங்களில் ஏனோ
ஓர் மௌனமாய் விரக்த்தி...
கோபம்...
வெறுமை.....
காரணங்கள் யாவுமே இல்லாமையாய்.....
காரணங்கள் தேடி போக
கலக்கங்கள் தான்.....

-



புதிராய் இருக்கும் வரை தான் எந்த உறவிலும் சுவாரசியம்
புரிந்து விட்டால் வெறுமையே மிஞ்சும்....

-


Fetching வெங்கடேஷ் ஊத்தங்கரை Quotes