உன்றன்
காந்தப் புன்னகை
கவர்ந்திழுத்த துருவோ
அந்த முகப்பரு?-
Amateur Writer@Night
I.G - @veeru_musings
ஒடியாத
வேய்ங்குருத்துகளாய்
வளைகின்றன!
முடியாத பல நினைவுகள்
வடியாத பால் நிலவாய்
விடாமல் துரத்துகின்றன!-
பிடரியில் இறக்கு - உன்
முத்தக் கோடரியை!
விடிய விடிய
இச் இச்சென்ற வெட்டுகளால்
துடிதுடித்துக் கிடக்கட்டும் இப்பசலையுடல்!-
நீ அனுப்பும்
மின்முத்தங்களின்
கதகதப்பு போதும்
பசலையின் குளிருக்கு!-
நீ வருகையில் மட்டும்
நிலாவை மேகங்கள் ஒளித்து
வைத்துக் கொள்கின்றன - என்று
நீ கோபம் கொள்வதில் நியாயமல்ல சகி!
மாடியேறி வரும் நிலாவைத் தரிசிக்கவே காத்திருக்கின்றன வான் மேகங்கள்!
நிலா அறிவதில்லை தானொரு நிலாவென்று!-
நீயில்லாத குறையை
நிவர்த்திசெய்ய பார்க்கிறது
கண்ணாடியில் நீ ஒட்டிய பொட்டு!-
வெறுமை நிறைந்த பொழுதுகளில்
உன்பெயரை எழுதி பூரிக்கின்றேன்!
ஒரு சொல்லில் கவிதையொன்றை
எழுதிவிட்டதாய்!-
சொல்லும் முன்னர் காதலை!
சொன்னதும் காதலியை!
பின்னர் கருவுற்றாளை!
பிறந்த குழந்தையை!
...,
சுமப்பது போன்றுதான்,
கவிதையைச் சுமப்பதும்!
யாவும்
சுகமான சுமைகள்!-
மாலையில் பெய்த மழையால் இளவேனிற் காலத்தின் இரவில் நடுங்கும் குளிருடன் ஒரு கனவு!
குளியலறையில் என்னுடன் இன்னொரு நிழல்!
ஐயோ! பேயென்ற பயத்தில் முதலில் நடுங்கிப் பின்னர் 'அறியாமையே பேயென்று பெருமூளை பிடரிவரை வந்துரைத்ததும், தெளிவாக கவனித்தேன் கனவில் நிழலை!
அந்நிழல், மின்விளக்கினருகில் வலைவீசி வேட்டைக்காக காத்திருந்த சிலந்தியாருடையது!
அறியாமைப் பேயை அறிவால் அணுக
தறிகெட்டுப் போகும் பயம்!-