வாதை ~ உபாதை
🔥👇🔥👇🔥👇🔥
கீழே வாசிக்கவும்-
நீ நிரூபிப்பதே நீ.
About me....!
Author✍️
Damn research scholar in anthropo... read more
பிரிவுக்குப் பின்
நினைவுகளின் சிலுவையில்
என்னை முழுதாய் அறைந்திருக்கிறது
உன் அன்பு.
ஏனோ...
உயிர்த்தெழும்
மூன்றாம் நாளென்ற ஒன்று
இதுவரையிலும்
இல்லாமலேப் போனது.
-
என்னடா இங்க பணம் எல்லாம் கேக்குறாங்க.
கவிதை அவ்வளவு எல்லாம் சம்பாரிச்சு கொடுக்கலடா.
🙄😴🙄😴🙄😴😂-
திரி எரிகிற இருள் இல்லையெனில்
சுடருக்கு ஒளியில்லை
தீபத்திற்கு மதிப்பில்லை.-
பசியிடம்
சில தனித்த விதிகள் இருக்கிறது...
சமயங்களில் அது
எல்லா விதிகளையும்
விழுமியங்களையும்
மீறச் சொல்லி
நிர்பந்தப்படுத்துகிறது.-
பிரியமான தின்பண்டம்
என்றாலும் கூட
தகப்பன் கை நீட்டி யாசிக்கும் முன்பே
இந்தாவென நீட்டுகிற சிறுமி
சட்டெனத் தாயாகிறாள்.
-
நிர்பந்தத்தால் நிகழ்ந்த
அந்த கடைசி வழியனுப்புதலில்
உனது அன்பின் குரல்
இவ்வாழ்க்கைக்குள் ஒலிப்பது
மொத்தமாய் நின்றுபோனது.
ஆனால் காலம் கடந்தும்
இதயத்தில் எதிரொலிப்பதை மட்டும்
அது நிறுத்தேவேயில்லை.-
திணிக்கப்பட்ட
மௌனங்களின் மேல் உருள்கிற
வழவழப்பான சொற்கள்
எடை மிகுந்ததாயிருக்கிறது
உமிழும் அபாயங்களை
தடுத்தாள்வதென்பது ஏனோ
அத்தனை எளிதானதாயில்லை.-