இங்கு எல்லாரிடமும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டிருக்காதீர்கள் இங்கு பலருக்கு பெரிய காதுகளும் மிகக் கூர்மையான நாக்கும் குறுகிய பார்வையும் மட்டுமே உள்ளன மேன்மையான மனமுடையோர் மிகச் சிலரே.
உனை கட்டி அணைத்து உன் மார்பினை என் கண்ணீரால் நனைத்து விலகிட முடியாது விரல்களை இறுக்கி நீ என் கண் விட்டு அகலும் வரை உனை சிறுபுள்ளியாய் தரிசித்து விடை தரவில்லை எனினும் இந்த நொடி நீ இங்கிருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால்செல்லப் போகிறாய் என்ற ஏக்கத்தினை உள்ளடக்கி இயல்பாய் என் இருத்தலை உணர்த்த இன்று நான் பட்ட பாடினை என் நெஞ்சுக்கூடு மட்டுமே அறியும்.