பக்குவம் வேண்டும் என்றால்
அனுபவத்தால் வரலாம்
அனுபவம் என்றும் வயதால்
மட்டுமே வருவதில்லை
வாழ்க்கையில் தாண்டும் தடைகளை பொறுத்தே வருகிறது-
என் தனித்துவமாய் மாறிப் போனது
தமிழின் கருவில் என் உயிரானது
கவி ... read more
சலனம் இல்லா மேகங்கள்
அதனோடு சத்தம் இல்லா உரையாடல்
காற்றோடு கதைக்கும் மரங்கள்
மெல்ல காற்றை வருடும் இலைகள்
இரைச்சல் இல்லா சாலைகள்
மெல்ல மனதை ஈர்க்கும் பாடல்கள்
என்ன வேண்டும் உலகில்
எல்லாம் உன் விரல் நுனியில்
கோர்த்து நடப்போம் பனியில்
உலகை அளப்போம் இன்ப நடையில்
-
ஆண்டு என்பது விதை - அதை
முட்டிமோதி முளைக்க வைப்பதும்
பக்குவமாய் செடி ஆக்குவதும்
அதை வளர்த்து மரமாக்குவதும்
நம் கையில்தான்
இந்த நாள் இனியதாகவும்
எல்லா நாளும் மனிதனாகவும்
பயணிப்போம் பயம் இல்லாமல்-
எழுதுகோலின் முனை
எனக்காய் குருதி சிந்தும்
அந்த பேனா
என் எழுத்துக்களை தாங்கும்
அந்த தாள்
தினம் என்னை புதுபிக்கும்
இந்த எழுத்துக்கள்-
திகட்டாத தேன் நிலா
விண்முட்டும் மேகங்கள் வழியே
குளிரூட்டும் இன்ப மழை
நீலம் குறையா வானம் நடுவே
வலைந்து நிற்கும் வானவில்
வர்ணிக்கும் உன் பேச்சின் வழியே
வழிந்தோடும் காதல் ரசம்
இதைத் தாண்டி எதை கேட்க
உலகமே நம் வசம்-
பத்தாவது தேர்ச்சி
பொறியியல் பட்டதாரி, எழுத்தாளர், இரண்டு விருதுகள், இரண்டு புத்தகங்கள், ஓட்டத்தில் ஏராளமான பதக்கங்கள், மென் பொறியாளர்(software Engineer), மேடைப் பேச்சாளர்-
மதயானைக் கூட்டம் நடுவே
பல கிருமிகளை
எதிர்த்துப் போராடி
என்னோடு விளையாடென்று
தில்லாக போட்டியிட்டு
விக்ரம் வேதாவாய்
அவதாரம் எடுத்து
பரியேறி வந்து விட்டான்
பெருமாள் துணைக்கொண்டு
நடை மாற்றி உடை மாற்றி
சிகையென்ற சித்திரம் படைத்தான்
சத்ரூக்களை சிறை எடுக்க
சிங்கம் போல் உருவெடுத்தான்
பிகிலடித்து ஊர் முழங்க
தளபதியோடு கைக்கோர்த்தான் - இன்று
ஜடாயுதம் ஏந்தி சத்ரியனாய் வந்து
சரித்திரம் பலப் படைக்கட்டும்-
பட்டாளத்திலிருந்து மகன்
வருகைக்காக காத்திருந்தாள் தாய்
மரணப் படுக்கையோடு-