எந்த பெண்ணும் இருக்க வாய்ப்பில்லை
பேருந்தின் நெரிசலில் அருவெருப்பான தீண்டல்களையும்
உறவென்று சொல்லி உரசிச்செல்லும் காமுகனையும்
நம்பிக்கையின் பேரில் நாசமாக்கும் நாய்களையும்
வாழ்க்கையில் பார்க்காமல் வாழ்வை கடக்க
சொல்ல முடியாத சங்கடங்களும்
கேட்க முடியாத வேதனைகளையும்
தண்டனை தரமுடியாத தவறுகளையும்
சகித்து கொண்டு வாழும்
ஒவ்வொரு பெண்ணுக்கும் நிச்சயம்
தேவைதான் இந்த "மகளிர் தினம்"
பெண்களின் மீதான தாக்குதல் தொடர
குழந்தைகளின் மீதான தாக்குதல் வலுக்கும்
இவ்வேளையில் பெண்கள்
கொண்டாடபட வேண்டியவர்கள்தான்!!!
வார்த்தைகளால் அல்ல வாழ்க்கையில்!!!
வாழ்த்துக்களைத் தாண்டி "வாழ விடுங்கள்"!!
#JusticeForPuducheryChild #JusticeForChengalpattuChild-
என் தனித்துவமாய் மாறிப் போனது
தமிழின் கருவில் என் உயிரானது
கவி ... read more
வெளிச்சத்திற்கான தேடலும்
கிடைக்குமென்ற நம்பிக்கையும்
விடாமுயற்சிக்கான திடமும்
சோர்வில்லா மனமும்
தொய்வில்லா சிந்தனையும்
பயமில்லா செயலுமே
இருளிருந்து உன்னை விளக்கும்
உயரம் தொட உயர்த்தும்-
தேவைகள் தீராது
தேடி கிடைத்தபின்னும்
தேவைகள் முடியாது
தேடல்தான் வாழ்க்கை
தேடிக்கொள்வதே வாழ்க்கை-
என் விழியேந்திய
உந்தன் உருவம்
விழி நீரில்
கரைந்தா போகும்
என் மனமேந்திய
உந்தன் நினைவோ
அந்த மரணத்தால்
மரித்தா போகும்
அந்த கடலளவு
காதல் என்றால் - அதில்
துளி நீராய்
நாமும் இருப்போம் வா-
குடையில்லா நாளில்
மழையென வந்தாய்
நனைத்து போவாய்
என்றே இருந்தேன்
என்னுள் உன்னை
விதைத்து போனாய்
வளர வளர எனக்குள்ளே
நிலைத்து போனாய்-
தீராத காற்றுக்குள்ளே
தீர்ந்து போகும்
சுவாசம் போல
தீராத காதலுக்குள்ளே
தீர்ந்து போகும்
வாழ்க்கை போதுமே— % &-
என் கனவே
சருகைப் போல இருந்தேன்
பசுமை தந்து துளிர்க்க வைத்தாய்
வழி மாறி நடந்தேன்
வாழ்க்கைத் தடம் மாற்றி விட்டாய்
கடல் நடுவே நின்றேன்
தீவாய் மாறி கரை சேர்த்தாய்— % &-
பணம் கொண்டு வாழ்பவரே வாழ்கின்றார்
மற்றோரெல்லாம் உழைத்தே சாகின்றனர்-
பணமென்ற பிணம்
பறந்து போகும்
காதல்கொண்ட உயிர்கள்
உயர்ந்து போகும்
பகை எல்லாம்
மறந்து போகும்
பாசம் மட்டும்
செழித்து போகும்
வாழ்க்கையை-
முடியாதே என்றாலும்
முடிந்து போகும்-