தனிமையில் நான் சோர்ந்திருக்கும் போதெல்லாம்,
உற்சாகமாய் உன்னோடு பயணிக்க வைக்கிறாய்..
அழகான ஒர் புது உலகை என் கண்முன்னே விரித்திடுகிறாய்..
அவ்வுலகையும், மனிதர்களையும், இயற்கையையும்
உன் கரம் கோர்த்து ரசிக்க வைக்கிறாய்..
அவ்வப்போது அவர்களைப் பற்றி புறம் பேசவும் செய்கிறாய்..
சில சமயம், நீ கவலை கொள்ளும் போது
எனக்கும் அழுகை வருகிறது..
நீ சிரித்திடும் போது நானும் சிரிக்கிறேன்..
நீ சினம் கொள்ளும் போது நானும் கோபம் கொள்கிறேன்..
உன் அத்தனை உணர்ச்சிகளையும், எனக்கே தெரியாமல் நான் உள்வாங்கிக் கொள்கிறேன்..
மனிதர்களைப் போல சுயநலமாக ஏமாற்றி
விலகிச் செல்லாமல், எப்போதும் என்னோடு இணைந்திருக்கிறாய் ஓர் காதலனை போல..
என்னோடு நீ இல்லாத நேரங்களில் மட்டுமே,
நான் உணர்ந்திடுகிறேன்
நீ ஓர் புத்தகம் என்கின்ற உண்மையை..
-