வெய்யோன் வெளிவரக்கரையும் வெண்பனி மாயோன் முகங்காணமறையும் என்பிணி..! -
வெய்யோன் வெளிவரக்கரையும் வெண்பனி மாயோன் முகங்காணமறையும் என்பிணி..!
-
வானெழுந்தவெய்யவன் கண்டுஇலையமர்ந்த பனித்துளிகள் மறைவது போலேஎழில் கொஞ்சும்சந்தன முகங்கண்டு துயர்நெஞ்சம் துள்ளல் கொள்வதேனோ..? -
வானெழுந்தவெய்யவன் கண்டுஇலையமர்ந்த பனித்துளிகள் மறைவது போலேஎழில் கொஞ்சும்சந்தன முகங்கண்டு துயர்நெஞ்சம் துள்ளல் கொள்வதேனோ..?
உன்புன்னகை பூத்தால் போதுமடி..என்வலிகளையும் வேரூன்றுவேன்..! -
உன்புன்னகை பூத்தால் போதுமடி..என்வலிகளையும் வேரூன்றுவேன்..!
மனைவி மடியகத்து மகவைமண்டியிட்டு முகர்ந்து மனம்மகிழ முத்தமிட்டு அதன் அசைவுகளை கடத்தும் தருணத்தில் தான் தந்தையும் தாயாகிறான்.! -
மனைவி மடியகத்து மகவைமண்டியிட்டு முகர்ந்து மனம்மகிழ முத்தமிட்டு அதன் அசைவுகளை கடத்தும் தருணத்தில் தான் தந்தையும் தாயாகிறான்.!
மண்தாங்க உடல்கிடத்திவிண்நோக்க கண்செலுத்திஇரவின் ஈரத்தில் அமைதியின் ஆழத்தில் அசைவற்று கிடக்கும் பொழுதுகள் தான்என் ஆடம்பரத்தின்அதீத அடையாளம்..! -
மண்தாங்க உடல்கிடத்திவிண்நோக்க கண்செலுத்திஇரவின் ஈரத்தில் அமைதியின் ஆழத்தில் அசைவற்று கிடக்கும் பொழுதுகள் தான்என் ஆடம்பரத்தின்அதீத அடையாளம்..!
மேனி மழை மேவிய பொழுதினில்நாணி நிந்தன் நினைவுகளிலேஉறைந்து நின்றநன் உயிர்த்துளியை கரைத்துச் சென்ற மழைத்துளி காண்! -
மேனி மழை மேவிய பொழுதினில்நாணி நிந்தன் நினைவுகளிலேஉறைந்து நின்றநன் உயிர்த்துளியை கரைத்துச் சென்ற மழைத்துளி காண்!
சுகமூங்கில் சூழ்கொடி போலேஅகம் தங்கி ஆட்கொள்ளுவான்..பிறைநிலா எனை பூர்த்திசெய்துநிறைசுடரென நெகிழ வைப்பான்.. -
சுகமூங்கில் சூழ்கொடி போலேஅகம் தங்கி ஆட்கொள்ளுவான்..பிறைநிலா எனை பூர்த்திசெய்துநிறைசுடரென நெகிழ வைப்பான்..
கனையிருள் வானில்கண்சிமிட்டும் மீனும் கருநீலக் கடலில் கரம்நீட்டும் அலையும்காட்சியூட்டா கவிகளைகண்டுரைப்பவள் நான்..! -
கனையிருள் வானில்கண்சிமிட்டும் மீனும் கருநீலக் கடலில் கரம்நீட்டும் அலையும்காட்சியூட்டா கவிகளைகண்டுரைப்பவள் நான்..!
ஓராயிரம் வெண் இழைகள்ஒருசேரக் கோர்த்து பின்னியசிலந்தியின் வலை - என்சிந்தனையின் அலை..! -
ஓராயிரம் வெண் இழைகள்ஒருசேரக் கோர்த்து பின்னியசிலந்தியின் வலை - என்சிந்தனையின் அலை..!
மோகித்து கண்மயங்கி பின்மலர்ந்த யாமத்து பனிமலர்களைக் கண்டுவானத்து மீன்களிடை - வெட்கிமறைந்ததாம் நிலவு..! -
மோகித்து கண்மயங்கி பின்மலர்ந்த யாமத்து பனிமலர்களைக் கண்டுவானத்து மீன்களிடை - வெட்கிமறைந்ததாம் நிலவு..!