அன்னம் ஊட்டி வளர்த்தவள் அம்மா
அறிவை ஊட்டி வளர்த்தவள் என் ஆசிரியர்
எழுதுக்கோல் பிடிக்க வைத்து
என் கையெழுத்தை மட்டுமல்ல
என் தலை எழுத்தையும் அழகாய் மாற்றினாய்
ஏதும் அறியா என்னை
எல்லாம் அறிய செய்தாய்
என் கனவுகளுக்கு ஊன்றுகோல் கொடுத்தாய்
என் உயிருக்கு உருவம் கொடுத்தது என் அன்னை
என் உருவத்திற்கு அடையாளம் கொடுத்தது நீ
எனக்கு கொடுத்த கல்வி மட்டுமே...
பெற்ற பிள்ளையைப்போல என்னையையும் உரிமையோடு
என் பிள்ளை என்று நீ அழைப்பாய்
உன்னோடு நான் இருக்கும்போது உன் அருமை தெரியவில்லை
இப்போதுதான் தெரிகிறது நீ எனக்கு கற்று கொடுத்தது பள்ளி பாடம் மட்டுமில்ல என் வாழ்க்கை பாடம் என்று....
-