ஒரு விரல் தீண்டினால்
பெண்மை நாணுமாம்...
ஓர் காலத்தில் உண்மையது..
இப்போது மங்கையை தீண்டுவது ஓர் விரல் அல்லவே!
பார்வைகளும் வார்த்தைகளும்
உரசல்களும் வெளிக்கொணர்வது நாணமல்ல எரிச்சல்களே.
கற்பை உடலில் புகுத்திடும் உலகத்தில்
கண்ணியத்தை கண்ணில் காக்கும் மாந்தர்கள் மிக அரிது.
துணிந்து நில் பெண்ணினமே
நீயாக தரும் வரை திருடப்படும்
உடல்பசிக்குப் பெயர் கற்பு அல்லவே!-
வலி தாங்கும் பெண்மைக்கு வலி கொடுக்கும் வன்மம்...
உயிர் கொடுக்கும் தாய்மையின் உயிர் பறிக்கும் அவலம்...
உயிர் காக்கும் விரல்கள்
உதிரத்தில் உரையும் வேதனை
பச்சிளம் பெண்ணோ
பள்ளிச் சிறுமியோ
குமரிப் பெண்ணோ
கூன்விழுந்த கிழவியோ
பெண்ணை சதை பிண்டமாகவே நினைத்து சிதைத்தெறியும் கயவர் கூட்டமே எப்போது உணர்வீர்கள் உன் உடலில் ஓடும் முதல் துளி ரத்தமும் உன் தாயின் சதை தந்தது என்று ?
-
முதுகில் குத்திடும் கோழையாய் வாழ்வதைவிட
எதிரில் நின்று போரிடும் வீரத்தில் மரணிப்பது மேல்-
முடியாதது போல் தொன்றினாலும் பாதைகள் எதுவெனினும் ஓர் இடத்தில் முடிந்தே தீரும் .
அவ்வாறு தானோ வலிகளும் ?-
இழந்தவற்றை எண்ணி வருந்துவதை விட
இருப்பவைகளை எண்ணி
மகிழ்ந்து நாட்கள் கடப்பது மேல்.
-
உன் வலிகளும்
அதை தீர்க்க நீ போராடும் வழிகளும் உனக்கு மட்டுமே தெரியும்.
விமர்சிப்பவர்களுக்கும்
வீண் விவாதம் செய்வோருக்கும்
விளக்கம் கொடுக்கத் தேவையில்லை.
கலங்காது துணிந்து நில் மனமே.
-
Learn to smile,
None cares how shattered you are inside...
Please them with kind words,
No matter how hurt you are inside...
Say I am fine,
Who cares about your fragile heart broken into pieces...
Show them you are the happiest person in the world,
Doesn't matter even if you feel completely lost..
Just show them you are stronger and out of any struggle,
Finally it is you who has to face your battle all alone.
They just witness whatever you show,
They just gossip and move around.
-
உன்னை காணும் நேரம்
என்னை மறக்கிறேன்...
உன்னை தினமும் வியக்கிறேன்...
விழி மூட மனமில்லை
ஆதவனின் வருகையில்
அழகே நீ மறைந்திடுவாய்...
தாய்மடி சுகம்
வான்மதி உன் அகத்தில் கண்டேனடி.-
தோப்பாக நின்றவன் தனிமரம் ஆவதும்
தனிமரம் விதை ஈன்று மீண்டும் தோப்பாவதும் படைத்தவன் கையில்.
ஆக்கத் தெரிந்தவனுக்கு அழிக்கவும் தெரியும்
அழிவிலிருந்து காக்கவும் தெரியும்.
நம்பிக்கையோடு ஒரு பயணம்
எங்கோ தெரியும் விடிவெள்ளியின் வெளிச்சம் நோக்கி.-