காதலில்
கொடி கட்டி பறக்கும் கவிதை
கல்யாணத்தில் ஏனோ
கொடியில் காயும் துணிபோல் ஆகிவிடுகிறது!!!
-
https://notionpress.com/read/thuli-thuliyaai
#Maduraikaran
#ChennaiNow
#Mechan... read more
வெளிச்சத்தின் அதிகார பிடியில்
இருகி போயிருந்த மெழுகுவர்த்தி
இருள் வந்து அணைக்கையில்
மெல்ல மெல்ல இழகியது!
ஒர் மின்தடை நேரம்!
மெல்ல சொன்னது
வெளிச்சம் மட்டும்
வாழ்க்கையில்லை!
வெற்றி மட்டுமே
மகிழ்ச்சியில்லை!!
— % &-
இன்று மட்டுமே கையில் என்று
எண்ணம் மட்டுமே மனதில் கொண்டு
முயற்சி மட்டுமே நித்தம் கொண்டு
முடியும் வரை மீண்டும் மீண்டும்
மந்திரமாக இதையே கொண்டால்
மாயாஜாலம் நிகழும் நாளை.!!
-
உன் மழலை மொழி
மொழி பெயர்ப்பதிலே
என் மழலை நாட்கள்
நான் காண்கிறேன்...!
என்ன நினைப்பாய் என
உன் நினைவை என்
எண்ணங்களில் பார்ப்பதிலே
என்னை மறந்துவிடுகிறேன்...!
அந்த பிஞ்சு கைகள்
என் கன்னம் பட்டால்
இதயத்துடிப்பும் தெம்பாகும்...!
சிவப்பு பாதங்கள் எட்டி
உதைக்கையில் உள்ளமெல்லாம்
மகிழ்ச்சி மத்தளம் கொட்டும்...!
நாளெல்லாம் நகரும் முட்கள்
உன்னுடன் விளையாடினால்
நாடியெல்லாம் வருடும் மலராய்!!!
-
புவி சூரியனை சுற்றினால்
வருமாம் நான்கு பருவகாலம்
நான் அவளை சுற்றி கண்டேன்
என் வாழ்வில் பருவ காலம்..!
அவளின் கோபம்
கோடை போல் சுடும்!
அவளின் மெளனம்
ஒரு இலையுதிர் காலம்!
அவளின் நெருக்கம்
நடுங்க வைக்கும் குளிர்!
அவளின் பேச்சு
என் மனதில் பெய்யும் மழை!-