தமிழ் கவிஞன்   (பிரியா👍🙂🍫)
759 Followers · 304 Following

Joined 10 March 2020


Joined 10 March 2020

கடல் கரை மீது
அன்பை அலையால்
ஆர்பரித்து காட்டினால் ....
அவன் அவள் மீது
அன்பை அமைதியால்
ஆர்பரித்து மூழ்கடிப்பான்...

-



எத்தனை ஒற்றுமை வந்தாலும்,
பிரித்து விட ஓர் வார்த்தை வைத்துள்ளனர் .....
இவன் இருப்பவன்!
இவன் இல்லாதவன்!

-



மனிதனாய் அனைவரும்
ஒன்றானபோதும்!
வாழ்க்கையால் வேறு வேறு தளம் என்றானோமே!!

-



நிலவின் பொக்கிஷம் ஒளியானால்
வானின் பொக்கிஷம் மழையானால்
மனிதனின் பொக்கிஷம் நினைவுகளாகும்.....

-



பொய்யை யாரும்
நிராகரிப்பதும் இல்லை
உண்மையை யாரும்
ஏற்றுக்கொள்வதும் இல்லை

-



காதோர ஜிமிக்கியும்
கவிதை ஜனனம்
கதைக்கிறது
அவன் பார்வையில்!

-



மொத்த அன்பும்
ஓர் நாள் கேள்வி கேட்கிறது
நீ எனக்காக என்ன செய்தாய் என்று?!!

-



கண்டு கொள்ளாத அவளது
மை விழிகளில் தான்
கண்டு கொண்டே இருக்கும்
மையல் பார்வை அவனுக்கு....

-



குறையை
மட்டுமே
கண்டுகொண்டவர்கள்
வெறுப்பையே
காதலிக்க
ஆரம்பித்துவிட்டார்கள்
போல ......

-



அவர்கள் அப்படிதான்
என்று ஏற்காவிட்டால்
நாம் நாமாக எழுந்து
ஓட இயலாது....

-


Fetching தமிழ் கவிஞன் Quotes