உடன் பிறந்தவனின் அழைப்பு...,
பேசுவதற்கென்று பெரிதாக ஒன்றும் இல்லை...
என்ன பேசுகிறோம் என்றும் தெரியவில்லை...
ஆனாலும், பேசிக்கொண்டே தான் இருப்போம்...
"என்ன பண்ற... இருக்கேன் நீ என்ன பண்ற" என்ற வார்த்தை மட்டும் குறைந்தது 8முறையாவது வந்து விடும்...
ஆனாலும், 9 வது முறையும் எட்டி பார்க்கும் சில சமயங்களில்...
இவை எல்லாம் content கிடைக்காத வரை தான்...
பேசுவதற்கு content மட்டும் கிடைத்தால் போதும்....
கிடைத்த content ஏ கடுப்பாகும் அளவிற்கு பேசுவோம்...
தினமும் வரும் அழைப்பு ஒரு நாள் தாமதமாக வந்தாலும், தாமதித்த சில மணி துளிகளுள் எண்ண ஓட்டங்கள் பலவாறு ஓட ஆரம்பித்து விடும்...
நான் பேச இயலா தருணங்களில் என் சிந்தனை மொத்தத்திலும் நீயே குடி கொண்டிருப்பாய்...
கடல் கடந்த தொலைவில் நீ இருந்தாலும், என் பலமும், ஆறுதலும் நீ தான் என்பதை சொல்ல தவறியதில்லை உன் குரலொழிகள்...
என்றும் உன் அழைப்பினை ஆவலோடு எதிர்பார்க்கும் நான்...,
-