கருப்பு வெள்ளை
புகைப்படத்தில் ஒளிர்கிறது வண்ணமயமான
நினைவுகள்...
நம் மனதிற்கு பிடித்த
சில உறவுகள் இன்றும்
கருப்பு வெள்ளை
புகைப்படத்திலே
நம்முடன் பேசிக்
கொண்டு இருக்கிறார்கள்...
இன்று வெவ்வேறு
ஃபில்டர்ஸ் உபயோகம்
செய்து ஒரு நாளைக்கு
பத்து புகைப்படம் எடுத்து கொண்டாலும்
கிடைக்காத சந்தோஷம்,
அன்று இரண்டு நாளைக்கு
முன்பு இருந்தே காத்திருந்து, நண்பர்களிடம்
மகிழ்ச்சியாக
பெருமை பேசி, புகைப்படம்
எடுக்க செல்வதற்கு என்றே
ஒரு அலங்காரம் செய்து,
கடைக்கு செல்வதற்குள்
அது அலங்கோலம் ஆகி,
கடை கண்ணாடியில் அதை
சரி செய்து, புகைப்படம்
எடுத்து, அந்த புகைப்படம்
கைக்கு வந்ததும் அதை மற்றவர்களிடம் காண்பித்து
மகிழ்ந்த தருணங்கள்
இனி ஏங்கினாலும்
கிடைக்கப் போவதில்லை!!!
-