புதைத்த மனிதனின் உடலில்
புழு ஒன்று பிறந்தது
உலகில் சமநிலை நிறுவப்பட்டது !
-
அனைத்துகொள்ளுதலின் போது வரும் கதகதப்பை போன்றவன்
அவனே
அனைத்துகொள்ளுதலின் போது வரும் வியர்வையை போன்றவன்
மானுடம் என்றுமே மானுடத்தின் புதிர் !-
இசை மழலை குழல் குருவி
காமம் காதல் பெண் முத்தம்
குளிர் வெயில் பணி பாலை
உறக்கம் உண்மை கோபம் மரணம்
அப்பப்பா
கண்டிப்பாக கடவுள் தான் உலகை படைத்திருக்கிறான்.
-
ஒரு இசையில் திளைத்து
அதில் விழுந்து
அதில் புதைந்து
அதிலேயே இறந்தும் விடு
அதிசயித்து பார்க்கவோ
அண்ணார்ந்து பார்க்கவோ
இந்த பூமியில் ஏதும் இல்லை
எங்கும் அற்ப உயிர்கள்-
எல்லா நிகழ்காலத்திலும்
கடந்த காலத்தின் கவலைகள்
எல்லா கடந்த காலத்திலும்
எதிர்காலத்தின் ஏக்கங்கள்
எல்லா எதிர்காலத்திலும்
நிகழ் காலத்தின் கர்மங்கள்-
ஏதும் வேண்டாம்
இந்த கட்டிலில் இருந்து இறங்க ஒரு காரணம் மட்டும் கொடுங்கள்
இல்லையேல்
இருண்ட அறையில்
துர்நாற்றம் வீசும் ஆடையில்
இந்த கட்டிலில்
தொலைந்ததின் நினைவில் தொலைந்துப்போவேன் !
-
எதுவுமே வேண்டாம்
நிம்மதி போதுமென்ற
இடத்தில் முடிகிறது
வாழ்வின் முன்னுரை-
உலர்ந்த துணிகளை அள்ளியே பிறகே
உதிர தொடங்கினாள் மேகம்
இத்தனைக்கு பிறகும்
இயற்கைக்கு நம்மேல் எவ்வளவு இரக்கம்-
ஒரே ஒருமுறை கை கூப்பி
கேட்டுவிட்டால் கொடுத்து விடுவானோ என்னவோ
அவனாய் கொடுக்கட்டும் என் நான்
கேட்டால் கொடுக்கலாம் என இறைவன் !!!-