என்னைச் சுமந்தாய்!
உன்னிடம் நான் பொய் தான் கூறினேன் என்று தெரிந்தும் அப்பொய்களின் பின் இருக்கும் என் பாரத்தையும் நீயே சுமந்தாய்!
நான் காயப்பட்டிருப்பேன்.
உன்னிடம் என் கோபங்களைக் காட்டிருப்பேன். இருந்தும் உன் மனக்கசப்புகளை அகற்றிவிட்டு எனது வலிகளையும் நீயே சுமந்தாய்!
சில நேரங்களில் உன் அனுமதி இல்லாமல் என் மௌனத்தின் சிறைக்குள் உன்னை அடைத்துள்ளேன். இருந்தும் அம்மௌனத்தின் பின் ஒலித்த என் மனவேதனைகளையும் நீயே சுமந்தாய்!
என் உடல் நலம் குன்றியபோது மாடிப்படியில் என்னைச் சுமந்தாய், மருத்துவ அறைக்கு என்னைச் சுமந்தாய், என்னை மீட்க உனது பிரார்த்தனைகளிலும் என்னைச் சுமந்தாய்!
நான் கடந்து வந்த பயணங்கள், என் கதைகள், என் அவமானங்கள், என் இழப்புகள். இவை எதிலும் நீ இல்லாவிட்டாலும் அவை அனைத்திலும் பாதியை நீயும் சுமந்தாய்.
என்னை இவ்வளவு சுமக்கும் உன் மனம், என்னை சுமன்ற தாயின் கருவறைக்கு ஈடாகும் என்று கூறினால் மிகையாகாது!!
-