விருப்பமானவை பல இருந்தாலும்
நெருக்கமானவர்களைத் தான்
தொலைத்துவிடுகிறேனே!-
𝐁𝐮𝐭 𝐍𝐞𝐯𝐞𝐫 𝐅𝐚𝐢𝐥𝐞𝐝 𝐀𝐭 𝐋𝐨𝐯𝐢... read more
இரவைத் தின்னும் அந்த
இரக்கமற்ற உறக்கத்தை
இமை மூடி யாசிக்கிறேன்
அது வருவதே இல்லை
மாறாக அவளே வருகிறாள்
மனதின் மாய பிம்பங்களாக
-
தேநீர் மணமாய்
தித்திப்பூட்டுகிறது
அதிகாலையில்
அவள் அனுப்பும்
குட் மார்னிங்🌞-
ஒன்றா? இரண்டா?
உள்ளம் தீண்டும்
உணர்வுகளை
ஒவ்வொன்றாய்
எண்ணுவதற்குள்
கூடி விடுகிறதே-
முட்களால் கட்டப்பட்ட
காக்கையின் கூடு
குத்தாமல் ஆதரிக்கிறது
குயிலின் குஞ்சுகளை-
சொல்லாத வலிகளை
சுமந்து நிற்கிறது
ஊமையின் விழிகள்
கண் பேசும் வார்த்தைகளை
புரிந்துகொள்ள யார் வருவாரோ?-
இதயக் கோவிலில்
நித்தமும் ஓர் மணியோசை
தொடர்ந்து ஒலிக்கிறது
தொடரமல் போன காதலால்
-
நீ கிளை, நான் இலை
நான் உதிர்கையில்
நீ தக்கவைப்பதும்
நீ உடைகையில்
நான் தாங்கி பிடிப்பதும்
எப்போதும் இயலாத காரியமே!
ஆனால் மண்ணில் ஈரமும்,
நம்மில் காதலும் தொடர்ந்தால்
முறிந்த உன்னில் நான் மீண்டும்
உயிர்த் துளிர்ப்பேன்-