பொதிகை மலையில் பிறந்தவளோ...
பொன்னும் மணியும் பூண்டவளோ...
காவேரி நதியில் நனைந்தவளோ...
கார்க்குழல் அள்ளி முடிந்தவளோ...
காட்டாற்று வெள்ளம் கடந்து
கார்மேகத்தை வென்றவளோ...-
செவி கேளா மேகமும்
விழி தெரியா வானமும்
வழியில்லாமல் நாமும்...
(Caption இல் தொடரவும்)-
உலகின் அத்தனை முதல்தர நட்சத்திர உணவகங்களும் வெட்கிதலைகுனிகின்றன...
உடலை உணவகமாக்கி
உதிரத்தை உணவாக்கி
உன் உயிர் காத்த அந்த
உண்மையான விருந்தோம்பலின் முன்னே...
#அம்மா...-
உங்கள் அன்பில்
பூத்த போர்க்களத்துப்பூவின்
உழவர் திருநாள்
நல் வாழ்த்துக்கள்...-
உன் முகம் காணா நாள் ஒன்று இங்கில்லை கண்ணே...
உன் நிழல் வீணாய் விழியோடு வழிந்தோடும்
மணியே...
உன் இலம் கண்டு நரம்போடு உயிராடும்
பனியே...
உன் துகில் உறித்த மனிதத்தை மன்னிப்பாயோ
இறையே...
-
ஐங்குரவர் பொற்பாதம் பணிய
கலைக்களஞ்சியமே கைகூட
புருடார்த்தம் எண்ணியெண்ணி
ஐம்பூதமாய் மறைவதேனோ???-
படபடப்பில்லா ஞாயிறு மாலை
அமைதித் தென்றல் வருட
வெகு நாட்களின் பின்
தாய் மடி மீது நான் உறங்க
அவர் என் தலைக்கோத
தேவையானது தெரியாதது என
சிறு கதைகள் பேசும்
இந்த நொடி நகராமல் நின்றாலென்ன???-
உனக்காக காத்திருக்கும்
ஒவ்வொரு நொடியிலும்
என் இதயத்தை தைக்கின்றன
கடிகாரமுட்கள்...
-
நமக்கெதுக்கு வம்பு???
இருக்க இடம் தெரியாம இருந்துட்டு
போய்டுவோம்!!!
😂🙈😂-
இன்னுமொரு நம்மாழ்வாராக
பிறக்க வேண்டும்!!!
வானகம் என வையகத்தை
மாற்ற வேண்டும்!!!-