திருமணம் என்பது வன் சிறையாகாமல்
நறுமணம் வீசும் நன்மலர்ப் பூங்காவாகட்டும்
_ பிறைசூடி-
என்று தெரிந்து கொண்டேன்
ஒரு வார அமைதிக்குப் பின்
வராத குறுஞ் செய்தியாலும்
சுற்றிவரும் வதந்தியாலும்
_ பிறைசூடி-
கூடி வாழ்வதே குடும்பம்
ஆயிரம் வேற்றுமைகள் இருந்தாலும்
ஒரு நாள் கிழமை என்றால்
ஏற்று சேர்வது உறவு-
நாலாயிரம் கோடி மேகங்கள்
வெள்ளிச் சரிகை உடுத்தி
களிப்புடன் உலா வர
தென்றல் தன் வாசத்துடன்
என்னைத் தழுவியவாறு
பாறை விளிம்பில் இச்சையுடன்
அருகமர்ந்து என் அச்சம் நீக்கி
விரிபடக் கூறியதெனக்கு
"பார் இப்பார் உன் கையடக்கம்"
_ பிறைசூடி-
மலர்கள் சிரிப்பது ஒரே ஒரு பகற்பொழுது
மலர வைத்த பகலவனிடம் காதல்
மலர்ந்த இன் முகத்துடன் அவனைத் தொடர்ந்து
மாலையில் மறையுமுன் வணங்கி நிற்கும்-
மணமில்லை
உறவில்லை
வண்ணம் பூசி
கொண்டவர் மகிழ
புன்னகை அணிந்த
காகிதப் பூக்கள்
_ பிறைசூடி-
தாம் தித்தாம் தை தத்தை
தைத்திட்டதாம் இத் தத்தை
தன் மனதை காதல் வித்தை
புன்னகையால் மறைத்திட்டதை
அவன் கண்டு நகைத்திட்டதை
ரசிப்போம் ஆடல் நாடகத்தை
_ பிறைசூடி-
எல்லாம் நடந்துவிட்டால்
சொந்த பந்தங்கள்
எங்கிருந்தோ வந்து சேரும்
தடைகளில் உழல்பவனுக்கு
சொந்த மக்களும்
சொல்லாமல் நீங்கக்கூடும்
_பிறைசூடி-
தருவாய் ஒரு வரம். உலகில்
இருக்கும் மாந்தர் மனதில்
அருள் கூர்ந்து அன்பைப்பெய்-