"பொருளீட்ட நான் உன்னை பிரிந்த
பழைய வலிகளே பட்டுப் போகவில்லை
திரும்ப அதை நிகழ்த்திப் பார்க்கவோ
எண்ணும் மனதிற்கு ஆறுதலே இல்லை"-
19 JUL 2021 AT 8:33
26 JUL 2021 AT 23:56
தலைவனே!
ரகசிய சந்திப்புகள் ரகசியமாகவே
இனி இராது
ஊரறிந்து உரக்க சொல்லி பழிக்கத்
துவங்கி விடும்
அன்னை அறிந்தால் அன்பனோடு
கலப்பது கடினம்
அழைத்துச் செல் அவளை உந்தன்
காதல் தேசத்திற்கு!
இப்படிக்கு
தோழி-
3 MAY 2021 AT 23:46
நற்றினை- பா 1- பொருள் கவிதை
============================
நீரின்றி அமையாது இவ் உலகு!
நீயின்றி அரும்பாது என் உசுரு!
வேரின்றி படராது பசுமை!
காதலின்றி படருமே பசலை!
பிரிவு நம்மைப் பார்த்து சிரித்தால் சிறுமை!
உறவால் நாம் பிணைந்தால் அதுவே பெருமை!
-
5 MAY 2021 AT 22:31
நற்றினை - பாடல் 2
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
வீட்டை விட்டு வெளியேறும்
காதலர் செல்லும்
சாலையதுவோ கொலை வெறியோடு
கடந்து செல்லும் காதலர் நெஞ்சமோ
கடலை விஞ்சும் காதல் வெறியோடு!-