விடிந்ததும் பார்த்தேன்
இதயத்தின் மீது
மௌனங்கள்
அடர்த்தியாய்
பனி போல
படர்ந்து இருக்கிறது
பனிவிலக
நான் நேற்று அனுப்பிய
தகவல்கள் அருகே
நீல நிறக் குறிகள்
இருந்தால் கூட போதும்-
என்னுடைய படைப்பு வரிசைகளை பின்வரும் ஹாஸ்டாகுகளை கிளிக் செய்து படிக்க... read more
அப்பா அப்பாதான்!
(குறுங்கவிதைகள் உள்ளே)— % &அப்பாவைப் பற்றி
கவிதை எழுத யோசிக்கையில்
அப்பாவை எந்தெந்த நேரங்களில்
எப்படி எல்லாம் அழைப்பேன்
என்ற யோசனையும்
வந்து அமர்ந்தது.
அட அப்பாவைத்தான்
எப்படி வேண்டுமானாலும்
அழைக்க முடியுமே!
— % &மாமாவின் இருசக்கர
வாகனத்தை எடுத்து
முதன் முதலாக ஒட்டிய பொழுது
அப்பத்தான்
போய் கொஞ்சம் சுற்றிவிட்டு வா
என்று கூறினார்
சுற்றி விட்டு வரும்போது
சிராய்ப்புகளுடன் வந்தாலும்
அதெல்லாம் அப்படித்தான்
ஆகும் என்றார்
அப்பா அப்பா தான்!
— % &தேர்வு முடிவு பார்க்க
செய்தித்தாளை
வாங்கிக்கொண்டு வந்து
கையில் தந்து விட்டு
சரியா பாருடா என்று
ஓரமாய் உட்கார்ந்து இருந்த
அன்றைய அப்பாவின்
நிலைமையை
இப்பொழுது அப்பா
ஆனப்பிறகுதான் புரிகிறது
— % &பட்டம் பயிலும் பொழுது
நேர்முக தேர்வுகள் எழுத
அதிகாரிகளின் கையெழுத்து பெற
அவர் அலுவலகம்
செல்லும் பொழுது
சக ஊழியர்களிடம்
படிப்பதை பெருமையாக
கூறிக்கொள்வது
ஏன் என்பது எனக்கு
விவரம் தெரிந்த போது
புரிந்தது
— % &அவர் பள்ளி படிப்பு
முடிக்காததால்
வேலையில் சிரமமும்
படிப்பின் அருமை மதிப்பு
உணர்ந்திருப்பதும்
— % &மந்தாரை இலையில்
கட்டி கொடுத்து
அப்பா வாங்கி வந்த
முந்திரிப்பகோடா போல
இப்பொழுதும்
ஏதேனும் கடையில்
கட்டிக் கொடுக்கிறார்களா என்று
தேடிக் கொண்டிருக்கிறேன்
— % &சைக்கிள் இருந்து விழுந்து
காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு
அப்பா வீட்டில் இருந்த பொழுது
மாலை பத்திரிக்கை
வாங்கி வர சொல்வார்
அப்பாவின் காலை பற்றி கவலைப்பட்டதே இல்லை
தினமும் கடலை மிட்டாய் வாங்க
ஒரு வாய்ப்பு கிடைத்த
மகிழ்ச்சி மட்டுமே!
— % &திருமணத்தைக்கான
அப்பா அப்பொழுது இல்லை
ஆனால் அவளும் நானும்
சந்தித்த காலத்தில்
ஒரு நாள் வீட்டுக்கு வர
அவளுக்கு நான் தோசையை ஊட்டி விடும் பொழுது
அப்பா பார்த்து விட்டு
ஒன்றும் சொல்லாமல் போனதே
ஆசிர்வதித்தது போலத்தான்!
— % &அப்பாவுக்கு சர்க்கரை நோய் வந்துவிட
தினமும் இரவில் சம்பா ரவை
உப்புமா செய்வது
அம்மாவின் பழக்கம்
அது கடாயில்
ஒட்டிக் கொண்டிருப்பதை
சுரண்டி சாப்பிடுவது
எங்களைப் போன்ற
பிள்ளைகளின் பழக்கம்
— % &அப்பா அப்பா தான்
அருகில் இருந்தாலும் சரி நினைவில் இருந்தாலும் சரி— % &-
பென்சிலால் எழுதுவதற்கு முன்னால்
அதனை கூர்மைப்படுத்த
வேண்டும் தானே என்றேன்
அவளிடம்
ஆமாம் என்றாள்
உதடுகளால் எழுதுவதற்கு முன்னால்
என்று சொல்லி முடிக்கும் முன் "பார்வைகளால் கூர்மை
படுத்த வேண்டும்
என்று சொல்லி ஒரு
பார்வை பார்த்தாலே
(ஓ மேலே கேட்காதே)-
கவிதை எழுதி விட்டு
வந்து அமர்ந்த பொழுது
குறி பார்த்து எறிந்த
கேள்வி ஒன்று
என்னை தாக்கியது
கவிதை எழுத மட்டும்
நேரம் உள்ளதோ?!
கசிந்த குருதியை
துடைத்துவிட்டு யோசித்தேன்
எழுதாமல் இருந்தால்
இப்படி துடைக்காமல்
இருந்திருக்கலாமோ?!-
நான் கவிதை ஒன்றை
எழுதி விடுகிறேன்…
அது நான் ஏதோ ஒன்றை
சொல்ல விரும்பியதாக இருக்கலாம் -
யாருக்கோ மறைமுகமாக
கூறுவதாக இருக்கலாம் -
என் மனசுக்குள் வியந்ததை
பகிர்வதாக இருக்கலாம் -
ஒதுங்க முடியாத மழையில் நனைந்த
அனுபவமாக இருக்கலாம் -
இவை எல்லாவற்றையும் விட
மனதில் மூச்சு திணறும் பொழுது
வெளியே வந்து சுவாசிக்க
ஒரு கவிதை எப்பொழுது
எழுதுகிறேனோ
அந்தக் கவிதையை மட்டும் நான்
அவ்வப்பொழுது எடுத்து
கொஞ்ச நேரம்
முத்தமிட்டு கொள்கிறேன்-
விழித்தவுடன்
கட்டிலில் சாய்ந்தவாறு
யோசித்தேன்
சன்னல்களை
திறக்கலாமா வேண்டாமா
திறந்தால் உள்ளிருக்கும்
குளிர்பதனம் வெளியேறும்
வெளியில் இருக்கும் காற்று
உள்ளே நுழையும்
இப்படி யோசிக்கும் போதே
ஒன்று தோன்றியது
உன்னை பற்றி யோசிக்கும் போது
சொற்கள் எனும்
சன்னல்களை திறந்தால்
உடனே நுழைகிறது
கவிதை காற்று-
போய் வாருங்கள்
(படிப்பு முடிந்து செல்லும் மாணவர்கள் பிரியாவிடை விழாவில் பாடும் பாடல்)-
அவ்வப்பொழுது
சிறு தூறல் போடுகிறது
பின்பு கொட்டோ கொட்டு என்று
கொட்டுகிறது
அதன் பின்னர்
அமைதியாக இருக்கிறது
சிறு சிறு முத்தங்கள் தருவதையும்
நன்றாக கொஞ்சுவதையும் பின்னர்
உறங்கி விடுவதையும்
உன்னிடம் இருந்து காப்பி
அடித்து விடுகிறது வானம்
-