அறுபதில் அரும்பும்
அவன் மழலையும்
அடிக்கடித் திரும்பும்
இளமையும்
அருகிருந்து ரசித்திட
அழகாய் கொஞ்சிட
அப்போதும் நாணிட
எப்போதும் சண்டையிட
இதயனின்
இம்சையில்
இளமைமாறா
காதலுடன்
இறுதிவரை
பயணிக்க ஆசை!-
தோழன் அவன்
என் அண்ணன்!
பால்யத்தை பசுமையாக்கிய
பெரும் பங்காளி!
பச்சிளங்குழந்தையில்
பசிக்கு நானழுதாலும் தாங்காத
பாசக்காரன்!
மாற்றார் உச்சிநுகர்ந்து
உரிமைகொண்டாடினால்
தாங்காத பொறாமைக்காரன்!
பக்கத்துவீட்டுக்கு சென்றாலும்
பாங்காய் உடன்வரும்
பாதுகாவலன்!
எனைத்தாங்கவென்றே
எனக்குமுன் பிறந்த
எந்தையின் மாற்றுருவம்!
((முழுப்பதிவு கீழே))⬇️👇⬇️👇⬇️👇⬇️👇⬇️👇👇
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
📝ஜீவி தமிழ்😍...
-
அப்பா!
இல்லையென்ற
வார்த்தை அவர்
சொன்னதேயில்லை
ஏதுமில்லை
என்றுணர்ந்து
ஏதும்கேட்காதவரை!-
கண்ட
கனாக்களையெல்லாம்...
காணத்துடித்த
நாட்களையெல்லாம்...
காத்திருந்த
மணித்துளிகளையெல்லாம்...
காதல்சுமந்த
கண்ணீரையெல்லாம்...
கண்ணீர்சுமந்த
கவிகளையெல்லாம்...
கவிதை சுமந்த
வலிகளையெல்லாம்...
காதலோடு
காலமெல்லாம்
கதைப்போமா இதயா..?!-
நீ
ஊட்டிவிட
வேண்டும்
என்பதற்காகவே
ஊடல்
கொள்கிறேன்
ஒவ்வொரு
உணவு
வேளையிலும்!-
அத்தான்னு சொல்லாதடீ
அடிச்சிருவேன் பாத்துக்கனு
ஆணவத்தில
நீ மறச்ச
நாணத்திலதான்
நான் விழுந்தேனடா
ஆணழகா!-
இதயராஜனுக்கு
இடம்கொடுக்காமல்
முரண்படும்
மூளை!
(முழுப்பதிவு கீழே)
👇❤️👇❤️👇❤️👇
🔽🤔🔽🤔🔽-