கடற்கரையில்
அருகருகே அமர்ந்திருந்தோம்
அலையின் சத்தத்தை
கேட்டாயா என்றேன்
கேட்டேன் நன்றாக இருக்கிறது என்றாள்
அது என்னுடைய ஏக்க பெருமூச்சு என்றேன்
தள்ளி அமர்ந்திருந்தவள்
அருகில் வந்து தோள் சாயத்தாள்
இப்பொழுது எப்படி கேட்கிறது என்றாள்
ஆழ்ந்த முத்தத்தின் பொழுது ஒலிக்கும்
சத்தம் போல் என்றேன்...
(ஓ மேலே கேட்காதே)
-
22 OCT 2023 AT 15:52