அலாரம் அடித்து
அவள் விழிக்க
நானும் விழித்தேன்
எழ முயற்சித்தவளிடம்
கூறினேன்
விடியல் இரண்டு
பொய்களை சொல்கிறது
ஒன்று
இரவு இன்னும் முடியவில்லை
இரண்டு
பகல் இன்னும் வரவில்லை
எதற்காக
இப்படி ஒரு விளக்கம்
நான் எழுந்திருக்கக் கூடாது
அதுதானே என்றாள்
(ஓ மேலே கேட்காதே)-
8 JUN AT 8:40
22 OCT 2023 AT 15:52
கடற்கரையில்
அருகருகே அமர்ந்திருந்தோம்
அலையின் சத்தத்தை
கேட்டாயா என்றேன்
கேட்டேன் நன்றாக இருக்கிறது என்றாள்
அது என்னுடைய ஏக்க பெருமூச்சு என்றேன்
தள்ளி அமர்ந்திருந்தவள்
அருகில் வந்து தோள் சாயத்தாள்
இப்பொழுது எப்படி கேட்கிறது என்றாள்
ஆழ்ந்த முத்தத்தின் பொழுது ஒலிக்கும்
சத்தம் போல் என்றேன்...
(ஓ மேலே கேட்காதே)
-