நிழலாடும் வெளிச்சத்தில்
நின்றாடும் நின் விழிகள்
பேசும் மொழிக்கு உவமை,
குளிர் பரவும் இரவும்
அதில் நடுங்கும் இதயம்
தவிக்கும் தவிப்பின் ஈடு.
-
19 JUN 2021 AT 15:24
24 JUL 2020 AT 0:33
நிசப்தம் நீவி
நுழைந்த மழையாம்
நீ விழுந்த இடம்
வண்ணம் - அதில்
வரைந்த ஓவியம்
கரைந்து வழிய
ஆனேன் நானும் நீலம்,
நீ ஓவியமோ அது
கரையும் தருணம்
ஒழுகி யோடும்
வண்ணமோ,
மழையோ அது வரும்
முன் ஆடும் மயிலோ
எதுவோ ஏனோ,
இன்று என்னையும்
சேர்த்தே நனைக்கிறதே!
#எழுத்தோலை!
-
10 AUG 2021 AT 1:12
எங்கிருந்தோ தூர வானில் மெல்ல
தூரல் விழ இங்கோ மலர்கள்
சிலிர்த்து மரங்கள் தடுத்தும் மோதும்
கிளைகள் உதிர்க்கும் அந்தி மழையே,
பட்டுத் தெரிக்கும் துளிகள் எல்லாம்
எட்டு திசையும் பரவும் சுகம் - அவள்
நின்று இரசிக்கும் இரசனைக்கு விழைந்து
மீண்டும் மீண்டும் வரும்.
#எழுத்தோலை!-