எங்கிருந்தோ தூர வானில் மெல்ல
தூரல் விழ இங்கோ மலர்கள்
சிலிர்த்து மரங்கள் தடுத்தும் மோதும்
கிளைகள் உதிர்க்கும் அந்தி மழையே,
பட்டுத் தெரிக்கும் துளிகள் எல்லாம்
எட்டு திசையும் பரவும் சுகம் - அவள்
நின்று இரசிக்கும் இரசனைக்கு விழைந்து
மீண்டும் மீண்டும் வரும்.
#எழுத்தோலை!-
நிழலாடும் வெளிச்சத்தில்
நின்றாடும் நின் விழிகள்
பேசும் மொழிக்கு உவமை,
குளிர் பரவும் இரவும்
அதில் நடுங்கும் இதயம்
தவிக்கும் தவிப்பின் ஈடு.
-
நெடியக் கழியும் இரா!
விடியல் வர விடியும் என
விரல்கள் ஒடித்து, விழிகள் நடித்து
வினாடிகள் கழிய விலகாதோ இருள்
விடியலே வா, விரைந்து வா,
இருளுடன் நமக்கேது முரண்
இருண்டுவிட்டதோ தமிழர் நலன்
இனியும், நொடியும் நெடியக்கழியும்
இரா இன்றோடு முடியட்டும்,
விடியும் விடியலில் உதயம் ஆம்
விலாகாத வெளிச்சத்துடன் உதயச் சூரியன்
விரைந்து எழுந்து, விறட்டும் இருள்
விண்னும் அதிரும், பொருத்திருந்து பார்.
எழுத்தோலை !-
கனவைத் திரித்து
கனவாய் மிதந்து
கனவே கனவாய்
கண்களுள் நிறையும்,
கனி முத்து நீ
கயல் விழி திறந்து
கருணை மழை பொழிந்து
காற்றுடன் கவி பேசும்
கவின் தமிழ் நீ.
-
"The real pandemic which
Made me fear all the time is
your eyes"
RK-
பெண்மை யில் எழுதிய
ஒருக் கவிதை- அதில்
எழுத்தும் சொல்லாய்,
சொல்லும் அர்த்தமாய்,
அர்த்தமும் முழுமையாய்,
பெண்ணாய் முடிய..,
அவளுள் யாவும் முற்றும்,
அவளேத் தமிழே,
அவளேக் கவிதை,
அவளே அழகே,
அவளே அன்பே..,
அவளைத் தேடிடு,
அவளைப் படித்திடு,
அவளைப் பிடித்திடும்
அவளைக் கொண்டாடிட,
நேற்றென்ன, இன்றென்ன
நாளையும் வந்தாலும்
நாளெல்லாம் போதாது - நாளும்
அவளில்லா நாளும் ஆகாது..,
பெண்மை யில் எழுதிய
ஒருக் கவிதை- அதில்
எழுத்தும் சொல்லாய்,
சொல்லும் அர்த்தமாய்,
அர்த்தமும் முழுமையாய்,
பெண்ணாய் முடிய..,
அவளுள் யாவும் முற்றும்.
#பெண்மையைபோற்றுவோம் ! #மகளீர்_தின_வாழ்த்துகள்
-