ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாத முதல்நாள்,
நாம் இருவரும் அருகருகில் அமர்ந்ததால் அறிமுகமானோமோ?
இல்லை..., நாம் அறிமுகமாவதற்காக அருகருகில் அமர்ந்தோமோ?
மறுநாள் முதல், நீ எங்கு அமர்ந்தாலும்
அங்கு உன்னருகில் அமர நெஞ்சம் துடிக்கும்.
தோழமை பலரிருந்தும் துணையாக என்னருகே இருந்தவன்(ள்) நீ!
நீ எடுக்கும் விடுப்பு நாட்கள் என்னருகே வெற்றிடமாய் அமைய,
நீயின்றி நான் தவிர்த்த அந்த நீண்டப்பொழுதுகளில் (நாட்களில்)
என் இடமும் வெற்றிடமாய் அமைந்திருக்கலாம்.
வகுப்பு விடுப்பு எடுத்து நாம் கண்ட
திரைப்படக் காட்சிகள் எல்லாம் உன்னருகினிலே,
மதிய வேளையில் உணவு பரிமாற்றி உண்டதாவும் உன் அருகினிலே,
இவ்வாறு அருகருகில் அமர்ந்த நாட்கள்
இப்போது நம் அருகினில்லாது கடந்துபோனதேனோ...?
#அந்த_கல்லூரி_நாட்கள்...!
#தமிழ்ச்சரம்-
30 JUN 2021 AT 17:18