QUOTES ON #LOVEFORTAMIL

#lovefortamil quotes

Trending | Latest
9 JAN 2018 AT 8:39

தமிழே...
வாழ்ந்தாலும் உனக்கு சேவகியாய் வாழ்வேன்
வீழ்ந்தாலும் உனக்குக் காலணியாய் வீழ்வேன்....!

-


3 FEB 2022 AT 15:33



என் மூன்றாம் காதல்
முகம் காணா காதல்
முடிவில்லா காதல்










— % &முதல் கோணல் முற்றிலும் கோணல்
அன்பின் தேடலில் கண்டுவிட்ட மோதல்
இதற்கெல்லாம் முடிவா சாதல்?
அள்ளி தெளிக்கிறேன் காணுங்கள் என் சாரல்— % &நிராகரிக்கப்பட்ட என் முதல் ஒருதலை காதல் (தருதலை காதல் என்று சொல்வதே தகும்)
நித்தம் நான் தொடர்ந்து கொண்டிருந்த
இரண்டாம் காதல் (அதுவும் தோல்விதான்)
பத்து மாதம் என வயிற்றுலும் பக்குவமாய் எனை நெஞ்சிலும் பாரமென கருதாது சுமரும் என்
வெண்பனிமகள் அவள் மேல் அளவற்ற காதல் அளப்பரிய காதல் (இக்காதல் எண்ணிக்கைக்கு உட்பட்டதல்ல)— % &சில காதல் நெஞ்சால் அள்ளப்பட்டது
படாத அல்லலும் பட்டது
சிலது சொல்லப்பட்டது
பலது சொல்லாமலும் விட்டது
கொஞ்சுதலால் கிள்ளப்பட்டது
மிஞ்சியதால் கிள்ளியெறியவும் பட்டது
கொடூரமாய் கொல்லப்பட்டது
கடூரமாய் கொள்ளியும் இட்டது.

— % &சிலரின் காதல் ஆழியை போன்ற காதல்
பலரின் காதல் அழகை போற்றும் காதல்
யாருக்கு தான் ஐயா காதலில்லை ?
காதலில் தோல்வி கண்டும்
மீண்டும் இளிக்கிறதல்லவா பல்லை?
அவிழ்க்கிறதல்லவா ? தாறுமாறான சொல்லை !
நீங்கள் எதிர்ப்பார்ப்பது எனக்கு புரிகிறது
அப்படி ஒரு காதல் என்னில் துளிர் விட்டிருப்பதை கண்டேன்
மறுபடியு-மா என்று நீங்கள் நினைக்கலாம்
ஆம்! இது எல்லாவற்றை காட்டிலும் சற்று மறு-படி உயர்ந்தது
எப்-படி அதை பார்க்கலாமா ?— % &
முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆனால் நிச்சயம் இம்மூன்றாம் காதல்
முழுமுதற் காதல் முழுமை பெற்ற காதல்
பாரபட்சமற்ற அன்பை மானிடருக்கு அளித்து கொண்டிருக்கும் பரமனவனின் முடிவிலியாய் காதல் என் முடிவுக்கு பின்னரும் தொடரும் காதல்
ஆம்! என்னை அன்பால் அள்ளி அணைத்த சர்வேஷ்வரனும், சொல்லால் மெல்ல அணைத்த தீண்டமிழுமே அம்மூன்றாம் காதல்
— % &முதற்பொருளின் காதல் என் மூச்சை உறைய செய்தது
முத்தமிழின் காதல் என்னை மூச்சிறைக்க செய்தது
பல-வர்ணமாய் என் மனதை கொள்ளையிட்டது
காதல் தர்மமாய் (மர்மமாய்) என்னை
சிறையிலிட்டது
காதல் சிறை விட்டு வர மனமில்லை
சிறகடித்து பறக்க நேரமுமில்லை
தேகமெங்கும் சிலிர்க்கிறது
இந்தளவு படித்தது போதுமே போங்கள்
எழுதுகையில் வெட்கத்தால் மேன்மேலும் முகம் சிவக்கிறது
இது என்னடா புது தாங்கல் ?
கண்டுணர்ந்தேன் மற்றதெல்லாம் வெறும் கானல்
இதுவல்லவோ மனதில் எழுந்த என் புதிதான தோன்றல்— % &

-


29 NOV 2017 AT 23:45

கண்னே கண்மணியே!
என் இனிய தமிழே!
உன்னை தினமும் சுவைப்பதில்
மனநிறைவு பெற்று,
மகிழ்ச்சியில் துள்ளுகின்றேன்!

-


1 AUG 2020 AT 3:08

I admire Tamil poetry!
I adore Tamil,
Not because it’s my mother tongue,
But because it is special, I felt
By the way we write,
I found a better version
Of feelings in an expression
Form as verses,
Those truly delight us!

-


16 JAN 2018 AT 11:43

தமிழன் என்றே வெளியில் பேசி
நம்முள் பிறமொழிச் சாயம்பூசி
தாய்மொழி இங்கே பேசக் கூசி
உழலும் சிலரை வெளியில் வீசி
உண்மைத் தமிழனாய்த் தமிழை நேசி!
பிறமொழி கற்போம் அறிவைப் பெருக்க
தமிழ்மொழி கற்போம் உயிரை வளர்க்க...

-


1 DEC 2017 AT 22:48

பாடப்புத்தகம் அலுப்பைத் தந்தபோது
பைந்தமிழே...உன் கவிதை இனிப்பைத் தந்தது
காரணம் தெரியவில்லை...ஆனாலும் உன்மீது காதல் கொண்டேன்!

-


23 JUL 2020 AT 12:48

தினந்தோறும் இரவில் நீ வேண்டாம் என்றே அழுகிறேன்...

ஆனால்,
அதிகாலை கண் திறப்பது நாம் ஒரு முறையாவது சந்தித்து விட இயலாதா என்ற ஏக்கங்களுடன் தான்...

-


24 DEC 2019 AT 17:11

எழுதப்படாத கவிதைகளில் காத்திருக்கிறது

நான் உன் மீது கொண்ட அதீத காதல்..

மயிலிறகு மையில் நான் எழுத தயார்

என் வரிகளை வருடி நீ படிக்க தயாரா என்றும் அறியாமல்...

-


9 APR 2020 AT 22:34

எதிர்பாராமல் பெய்யும் மழை போல
இருக்கின்றது நான் உன்மேல் கொண்ட காதல்..

எப்போது பொழியும் என்று மேகதிற்கும் எனக்கும் தெரிவதில்லை..

ஆனால்,

பொழியும் தருணம் மனம் திறந்து அழுகிறோம்..

நானும் , மேகமும்...

-


26 MAR 2020 AT 19:49

கடவுளிடம் நான் கேட்டது உன்னை மட்டுமே..
உன்னை தவிர அனைத்தும் அருளி
என்னை சந்தோசமாக வாழ கூறினார்
நான் சந்தோசமாக இல்லாமல் காரணம் சிந்தித்தே கடந்தது வாழ்க்கை..

-