அம்மா.....
என்றும் என் உயிராக நீ
பிடித்த தலைப்பு
உன்னை விட வேறெதுவும்
யோசிக்கத் தோன்றவில்லை..
-
3 JUN 2020 AT 13:38
15 MAY 2021 AT 20:15
அதுவரை ஓலமிட்ட குரல்கள்
ஒரளவு ஓய்ந்திருந்தது
அவர் உடல் கிடத்தப்பட்ட
மரநாற்காலியை தனியே விட்டு..
பகலே தான் அது..
இன்னும் காயாமல் இருந்த
அந்நாற்காலிக்கு மேலும்
இரு கால்கள் துணையாக,
சாயும்வேளை சாயும்வேளையாயிற்று..
இழந்தது ஒருவரைதான்
ஆனால் ஓராயிரம் ஒளிக்கற்றைகள்
அவ்வோலைப்பந்தலின்
கண்களின் வழி வருவோரையெல்லாம்
புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தது..
கல்யாண சாவாம்....-
13 APR AT 5:44
முதல் நாள் தொலைத்த உறக்கத்திற்கு
அடுத்த பகல் முழுதும் உறங்குவது விதியெனில்
சற்றே மாறுதலாய் எனக்கு மட்டும்
புதிதாய் ஒரு விடியல்..
இதுவரை வருத்தம் சேகரித்து
கோர்த்த கண்ணீரின் துளிகள்
இன்று விருத்தம் சேகரித்து
பன்னீரின் பனித்துளியாய்
கோர்த்து நிற்கிறது என்னில்..
விடியல் நலமாகட்டும்...
-