"Life is a single yarn
it's in our hands to weave
a beautiful pattern
or leave it tangled and torn...
-
பல காரணங்கள்
வேண்டுகிறேன்..
இருக்கின்ற கவலையை
அழுது தீர்க்க...
உப்பு சப்பில்லாத
காரணங்கள் கூட
சிலநேரம்
தேவைப்படுகிறது
இந்த கண்களை
கொஞ்சம் கழுவிக்
கொள்வதற்கு..-
செம்பவள அணி உனக்கு
சேமமான வாழ்வெனக்கு..
பச்சை மணி மாலையுனக்கு
பசுமையான நினைவெனக்கு..
நீலக்கல் நீயணிய
நிறைவான நலமெனக்கு..
முத்து மாலை கோர்த்து தர
முத்துநகை எங்களுக்கு..
காசு மாலை கழுத்தில் இட
கோடி பணம் கைகளுக்கு..
பூக்களோடு பன்னீரும்
வெண் பட்டும் வெள்ளி கொலுசும்
எல்லாமும் இசைந்து தர,
வேண்டும் கரம் இறக்குமுன்னே
வேலோடு வந்திடுவாய்..
வினையெல்லாம் தீர்த்து வைத்து
வெற்றியைத் தந்திடுவாய்..
மணியெல்லாம் பூணுமுன்னே
மனசெல்லாம் அணிந்தவனே....
சண்முகனே சரவணனே
சரணடைந்தோம் உன் பாதம்...
-
சேவற் கொடியானின் சிங்கார ஊர்வலமே
செல்வத் திருப்பாதம் செகமெல்லாம் ஊன்றிடவே..
சொக்கும் அழகுகாட்டி சிந்தை ஈர்த்திடுவான்
செல்லும் வழியெங்கும் செல்வன் அவன்துணையே..
-
பெரிய அறையில்
எங்கோ டிக்கிக் கொண்டிருக்கும்
கடிகாரம்
நிசப்தத்தை கிழித்துக்
கொண்டிருக்கிறது...
ஒரு வேளை அது
ஓரத்தில் துடிப்பதை
நிறுத்தி விட்டால்
இந்த மௌனம்
இதயத்தை கிழித்திருக்கும்...-
காக்கா கடி கடித்த
கொய்யாப் பழங்களும்
மிச்சம் வைத்த லாலிபாப்புகளும்
ஆரஞ்சு மிட்டாய்களும்
இதழோரம் எச்சில் கூட்டுகிறது
இன்னும் நான் குழந்தையென..
இதற்கு ஒரு படிக்கு அப்பால்
இன்னும் காய்வதற்கு தொங்கும்
சேலையிடையே
புகுந்து விளையாடுவது
எந்த கணக்கில் சேருமோ...
-
இன்றிந்த அலங்காரம் காண
நின்றிந்த கண்கள் வாடும்
என்றிந்த பெண்ணின் தேடல்
சென்றுந்தன் சேவடி சேரும்...
கழலோடு வீரம் காட்டி
தழலோடு கண்களை காட்டி
விழலான சூரனை வீழ்த்த
கிழக்கிலே வந்த பெருமான்..
மணியணிந்த மார்பை விடவும்
அணியணிந்த இடையை விடவும்
தணியணிந்த விழிகள் போதும்
நனியாக வாழ்வதற்கே...
-
"Will you give me a shelter, my dear?"
Whispered the breeze, trembling near.
"I’ve roamed too long through storm and night,
Just seeking warmth in your gentle light.
The tree replied with a tender sigh,
"My roots are bound, I cannot fly.
I have no home to offer thee,
Yet you may rest within me
Come, sway through my leaves,
And breathe in my shade,
I’ll hold your pain till it slowly fades.
The breeze smiled, calm and free,
"You gave no roof — yet gave me thee.
No wall could hold such love, I see,
For my heart already lives in thee.
Will you be my tree...?
-
கடலாடும் மண் மேலே
கரையோடு கொடும் போரை
கதிர்வேலோடு கதை முடித்த
கந்தனே...
கருணை வேலனே....
கதியெல்லாம் நீயென்று
கரைசேர உன் பதம்தேடி
கரம்கூப்பி நிற்கின்றேன்
கந்தனே..
கருணை வேலனே...
கொடுவினைகள் காலத்தில்
கொடுப்பினைகள் தேடி உந்தன்
கொடிதூக்கும் குலம் காப்பாய்
கந்தனே...
கருணை வேலனே....
குடியெலாம் தழைத்தோங்க
குமரனுக்கு கடும்விரதம்
கொண்டாடி பாடவந்தோம்
கந்தனே ..
கருணை வேலனே...
கரம் பிடித்து எனையேந்தி
கனிவாகும் வரம் தந்து
கருணையினால் காத்திடுவாய்
கந்தனே..
கருணை வேலனே....
-
அவதானித்து முடிக்கும் முன்னே
அவசரமாய் ஒரு வெளியேற்றம்...
இடறிய கற்களுக்கு தான்
எத்தனை திட்டல்கள்..
கற்கள் இருக்குமிடம்
என்னவோ ஒன்றுதான்
தவறி விழுந்த கால்களை
வெட்டிச் செல்வதில்லையே யாரும்...
மூளை நிதானிக்கும் முன்னே
நாவிற்கு என்ன அவசரம்...
தூக்கத்தில் வெளிவிடும்
சுக்கிலம் போல
குளிக்கையில் கழிக்கும் சிறுநீரைப் போல
வார்த்தை வெளியேற்றமும்
இயல்பாய் வெளியேறி விடுகிறது
யாதொரு பயனுமின்றி..
சொற்கள் சுவடாகும்
தேவையறிந்த இடத்தில்..
சொற்கள் வடுவாகும்
தேவையற்ற இடத்தில்....
🤗🤗🤗-