. .........-
#jothi_tamil kavi
The perception may change
But not be the truth...
The updated version can be the best
But not shows the real...
Sometimes the old can be old
But not faded from new...
-
தெளிந்த மனதில்
கல்லை எறிந்தால்
புள்ளியில் தொடங்கி
ஆயிரம் வட்டங்கள்..
எறியப்பட்ட கல்
ஆழ்மனதில் அமைதியாக
உறங்குகிறது...!
உருவாக்கிய சலனங்களோ
எல்லை தொட்டு
இருப்பிற்கு திரும்பும் முன்
பிம்பம் குழைத்து
பேரதிர்வுகளை
உருவாக்கி விடுகிறது...
-
இரவை விரட்ட
நடக்கும் பந்தயத்தில்
இரவெல்லாம்
விழித்து முடித்து
விடிந்த பின்
உறங்குகிறது
கனவுகள்...
-
தினமும் அதே நேரம்
அதே இடத்தில்
அவன் வருகை...
அவசரமாய்
முட்டைப் பொறியலுடன்
சாதம் குழைத்துக் கொடுத்து
சூடாக இருக்கிறது
நிதானமாக உண் என்றேன்...
பக்கத்தில் அமர்ந்து
பாதி ஆறியதும்
முட்டையை மட்டும்
தெளிந்து எடுத்து உண்டான்,
பாதியை மீதமாய் விட்டு...!
பாவம் அவன் என்ன செய்வான்
நேற்றைய பழைய சோறு
போல இன்றைய சுடு சோறு
ருசிக்கவில்லை போல....
வாயில்லா ஜீவன் ஆயிற்றே...!
-
நிலவும் ஏங்குமே..
நீ சிரிக்க
உதிர்ந்து வீழும்
நட்சத்திரங்களுக்காய்.
ஏங்குகிறது நிலவு...!
-
என் இரவை நிறைக்கும்
உன் நினைவுகளுக்கு
உறக்கம் எப்போது..?
எட்டு மணி நேர
உறக்கம் உடலுக்கு அவசியமாம்...!
நீ நித்திரை கொள்
நான் நேத்திரம் விழிக்கிறேன்...!-
வெண் மேகத்தில் ஒரு காடு...
மரங்களும் மலைகளும்
யானைகளும் முயல்களும்
அணில்களும் அரவங்களும்
சிங்கங்களும் சிறுத்தைகளும்
அவ்வப்போது முழக்கமிட்டு
ஆட்டங் காட்டுகிறது...
இருந்தும் நீரோடையின்
ஒருதுளி மட்டும்
நிலவாய் தோன்றி
தெளிந்த வானத்திலிருந்து
சோறூட்டுகிறது மழலைகளுக்கு..
-
விளையாட்டாய் அவன்
கூறும் பொய்கள் கூட
விழிகளில் நீரைக்
கோர்த்து விடுகிறது..
துளிர்க்கும் நீரை எடுத்து
சுண்டி விட்டு சிரிக்கிறான்...!
அசடு அசடு
அழுவதற்கென்ன என்ன
அவசரமென்று..!
-
நேற்றைக்கடந்து
இன்று இன்றே மட்டுமானால்
இன்றைய நேரத்தின் முதலீடு
நாளை பன்மடங்காய்
பெருகி வளரும்...
இனிய காலை வணக்கம் 💐💐-