சிந்தனையில் இன்று
ஔவையார்..!!-
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை...
தெய்வமே குடி இருக்கும் இடம்
அன்னையின் உள்ளம்....
அனைத்து வளம் பெற,
அவளை வணங்கிடு....-
திரைகட லோடியும் திரவியம் தேடு
வாலிபம் இருக்கையில்
வாய்ப்புகள் அமைத்து
உலகை அளந்து
பொருள் ஈட்டிடு....-
மோனம் என்பது ஞான வரம்பு
வார்த்தைகள் அற்ற மௌனம்
மிகச் சிறந்த ஞானமாகும்-
சான்றோர் என்கை ஈன்றோட் கழகு...
கோடிகள் ஆயிரம்
இருந்தால் என்ன
அன்னையின் மகிழ்ச்சி
பிள்ளையின் பெருமையில்....-
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
தெய்வத்திற்கு நிகராம்
தந்தை..
வாழ்வின் வழிகாட்டி...
அவர் வாக்குகள் எல்லாம்
நல் வாக்கே...
என்றும் அளிக்கும் செல்வாக்கே...-
சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை...
வம்சம் தழைக்க
உறவுகள் சிறக்க
தலைமுறை தொடர
மக்கட்பேறு அவசியம்...-
வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண்
அரசனுக்கு இணையான
செல்வமே இருந்தாலும்
வரவும் செலவும்
கணக்கில் வைத்திடு.....-
நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை
மறைத்து செய்யப்படும்
தவறுகள் எதையும்
மறைத்திட இயலாது
மனதிடம் இருந்து...-
பிறன்மனை புகாமை யறமெனத் தகும்
கொண்டவளை
கண்ணுக்குள்
கொண்டவர் ...
பிற பெண்களை
கண்ணெடுத்தும்
பாரார்....-