Suryaa Sathriyan   (சூர்யா சிவன்)
645 Followers · 109 Following

read more
Joined 13 July 2018


read more
Joined 13 July 2018
7 FEB AT 20:57

வானத்து சாற்றை நினைவில் - ஊற்றி
ஏட்டில் பிழிந்த ஏழ்வர்ணமும்
மருள் மாலையின் துளி - ஓயும்
பொழுதினுக்கு தரையாடும் வானவில்லாய்
இருதய சோலையில் சிலிர்க்கும் - வெண்மயிலின்
தோகை ஒவ்வொன்றினுக்கும் காதல் சொல்லும்
குளிர் மேவும் கதிரொளிக்கு - பிறைசூடும்
உந்தன் வெண்விழியின் காதல் கடிதம்

-


14 JAN AT 10:48

ஒன்றில் நடுவே மெயொத்தி
முழுமை வாழ்வின் சித்தமும்
கரம்மேவும் திருக்கழல் பற்றிடும்
வரம்வார்க்கும் ஆருரான் அடியே
மூச்சும் ஆழ்துளியும் ஈகையிடும்
பொழுதினுக்கு இறங்கி அடியேனை
ஆற்றுப்படுத்தும் பெருந் திண்ணம்
எளியோன் நிழல்புகுவாய் சிவம்

-


3 NOV 2024 AT 8:02

உந்தன் செவ்விழி நிழலேந்தும்
இமை ஒற்றையில் எந்தன் நினைவும்!
உந்தன் கார்மணியில் நிறைந்து
ததும்பும் ஆர்ப்பரிப்பில் எந்தன் அரவணைப்பும்!
உந்தன் இருதய சுவாசங்களில்
முறையொன்றில் நுழைந்திர ஏங்கும் உயிரும்!
உந்தன் நிறைவிழியின் துளிகளில்
கசிந்திட தவமேற்று கிடக்கிறது எந்தன் காதல்!

-


3 NOV 2024 AT 7:57


விழிநிறை அன்பிற்கு மிதகாய்
துளியாகுதோ உந்தன் நினைவுகள்!
எந்தனிமை சிமிட்டிடாது தாங்கிக்கிடக்கும்
உந்தன் பிம்பங்களின் பாரங்கள்!
வாழ்வேழும் நிறைந்து வந்தும்
கானல் வழியின் காடலாகுதோ!
உந்தன் காரிருள் மைவிலக்கி
எந்தன் காதல்விழியின் ஒளியாவாயோ!

-


3 NOV 2024 AT 7:55

மொட்டு அவிழ்ந்து தேனெடுத்தும்
சாயம் ஒட்டா இதழ்களாய்
விரல் நோக மகரந்தமுறுஞ்சி
மனம் நிறையா பட்டுபூச்சியாய்!
அக்கறைக் கொண்டு நாட்படும்
களைப்பின் சளிப்பாய் குணங்கள்
ஆவது அன்பின் நோன்பில்
சாயம் போய்விடுகிறது - காதல்!

-


3 NOV 2024 AT 7:52

என்னுள் நீ

-


3 NOV 2024 AT 7:48

காதல் துளிர்

-


3 NOV 2024 AT 7:44

ஆர்ப்பரித்து அயர்ந்திருக்கும் கண்களுள்
நிறமாடும் செவ்விழி இரண்டும்
நூற்றின் ஜனனத்தில் ஒன்றாய்
நினைவுகளை ஏந்திக்கடத்தும் இருதயச்
சாளரத்தின் உயிர் சுவாசத்தில்
வந்தணையும் உதிரம் நீயாய்!
நாளும் வாழும் காதற்களியில்
சிணுங்கி மலரும் தாமரையும்! - நிலவும்!!

-


3 NOV 2024 AT 7:42

இன்பச்சொரிவும் இளநினைவும்
இளநரை இங்குமங்கும் இருந்தும்
இணைப்பில் இறுகப்பற்றி
இயக்கும் இருதயத்தின்
இளைப்பாறல் இருக்கும்
நிறைவாழ்வின் அர்த்தம் நீ!!

-


25 JUN 2024 AT 18:58

அன்புறு மனத்தில் ஆத்மம் நிறைத்து
கணமொரு நீங்கா ஈகை பற்றிட்டு
உமை ஓழுக நீயாய் நீயே!
ஆழ்பதிந்து காற்றாடும் திசை இழுத்து
தென்மண்ணில் கோலாடிய அடி தொட்டு
அடியர்க்கு ஒளியாய் தோன்றின் தோற்றமே!
பார் வியந்து விழியேந்தும் சுகந்தந்து
புதைப்பட்ட கழல் மேவும் தமிழே! - சிவம்!

-


Fetching Suryaa Sathriyan Quotes