இப்போதெல்லாம் தடுமாறியோ, தடுக்கியோ இல்லை அடையாளம் தெரியாத வாகனம் மோதியோ எப்படி இருந்தாலும் பாதையோரம் விழுந்து கிடப்பவனை பார்த்ததும் அப்போதே காரணத்தை கண்டு பிடித்து விடுகிறார்கள் மக்கள் எனும் துப்பறிவாளர்கள்.... ""செம போதை"
உருபோட்டு வந்த வார்த்தைகளை பேச வந்து எனை பார்த்த கணத்தில் அத்தனையும் மறந்து ஏதோ ஒன்றை உளறிக்கொட்டி அசடு வழிய வெட்கச்சிரிப்போடு நாம் கடந்து சென்ற அதே இடத்தில்.. இன்றும் நான் மட்டும் காத்திருக்கிறேன்...! மீண்டும் ஒரு முறை வந்து சரியாய் சொல்வாய் என...!! நம் காதலை நீ முறித்து போன பின்பும்..!