குடும்பப் பெண்ணின் மனக்குறிப்பேட்டிலிருந்து...
நீதான் என் கண்ணன் என்று ராதை போல் முன்பே அறிந்து மனமுருகி அகமலர்ந்து
கை பிடிக்கவில்லை நான்...
எங்கோ இருந்த நான், உன்னோடு சேர்த்து கட்டப்பட்டேன் மூத்தோர்களால்...
இதுவே நியதி என்று கட்டுண்டேன் நான்...
நியதிப்படியே காதல் கொண்டேன்... கருவுற்றேன்... வளர்த்தெடுத்தேன்...
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
என் கண்ணனை உன்னில் கண்டு கொண்டேன் என்ற மாயையினால்....
-
படிக்கும் போது மனதிற்கு
மகிழ்ச்சி...
பிறர் படிக்க நாமே கவிதைகள்
படைக்க... read more
நாம் முயற்சிப்பதெல்லாம்
முடியாமல் போகும் போது...
நிச்சயம் நம்புங்கள்...
அது நம் நன்மைக்கே.-
சாதிக்க நிறைய இருக்கிறது.
கோபப் படாமல் இருக்க...
பிறரைப் பற்றி குறை கூறாமலிருக்க..
எதிர்பார்ப்புகளை குறைக்க...
நமக்கான நேரத்தை ஒதுக்க...
அவமானங்களை அலட்சியப்படுத்த...
ஆன்மீகத்தில் ஈடுபட...
ஆனந்தமாய் வாழ்ந்திட!!
#பிடிவாதம் நல்லது.
-
ஆயிரம் முறை சொல்லிக்
கொண்டாலும்
மனதில் பதிவதில்லை...
புகழ்ச்சியோ... இகழ்ச்சியோ...
மனதில் ஏற்றாதே...
அதை திரும்பத் திரும்ப ஓடவிட்டு
மயக்கமோ தயக்கமோ கொள்ளாதே
என்று...-
யாருடைய தேவைக்கும் நாம் பயன்படுவதில்லை...
என்ற வலியை விட
தேவைக்கு மட்டுமே நாம்
பயன்படுத்தப் படுகிறோம்
என்ற வலி சிறிது தூக்கலே...-
இயல்பான சொற்கள்...
இலகுவான புரிதல்...
இனிமையான நேசம்...
இணைந்திருக்கும் அக்கறை...
இன்னும் இன்னும் பல பல...
தங்களின் தொடர்ந்து சீரான நிலையான அர்ப்பணிப்பான எழுத்துக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉-