Srinivasan Mahalingam   (Sreenysri)
122 Followers · 116 Following

read more
Joined 30 January 2022


read more
Joined 30 January 2022
9 OCT 2022 AT 9:47

நித்தம்!!
நிகழ்வுகள் மாறும் நாட்கள்
நகர!
கனவுகள் ஆழும் கடந்தவை
மறக்க!
மனமோ மறுக்கும் நடந்தவை
ஏற்க!
கற்பனை வாழும் நிகழ்ந்தவை
மறுக்க!
கண்ணீரும் கதைக்கும் உன்காட்சிகள்
அழிக்க!
கடல்நீராய் பெருகும் உன்நினைவுகள்
துளைக்க!
கனவுகள் கலைந்தன! கற்பனை
உடைந்தன!
காலம் கடந்தன! மீளா காயத்துடன்
கவி!....

-


21 MAY 2022 AT 12:34

ஆவல்!!!!

மலர் என்ன அழகா ? அவள்
புன்னகை போதும் உலகின் அழகாய்!
நிலவென்ன நகலா ? அவள் கண்களில் கண்டேன் அசல் நிலவின் அழகை!
நதி ஓட்டம் மெல் இசையா ?
அடடா அவள் நடை போதுமே!.....

-


25 APR 2022 AT 22:45

அவள்!!..

பெண் இனத்தில் ஒரு பேரொளி
அவள்!
விண் வெளியின் தேவதை
அவள்!
பூவினத்தின் புதுப் புன்னகை
அவள்!
நந்தவனத்தின் புள்ளி மான்குட்டி
அவள்!
பத்தாம் மாதத்தின் பால்நிலா
அவள்!
சித்திரை மாதத்தின் திருவிழா
அவள்!.

-


16 APR 2022 AT 21:36

அவன்!!!!...

நீ இல்லா நாளொன்று
நினைத்தான்!
அன்று நிலவில்லா இரவைப்போல்
துடித்தான்!
தினம் உந்தன் குணங்கண்டு
வியந்தான்!
கவண் உந்தன் சினங்கண்டு
சிதைந்தான்!
கவி உந்தன் குரல்கேட்க
நிறைந்தான்!
கனி உந்தன் பார்வைப்பட
கரைந்தான்!

-


13 APR 2022 AT 7:44

என்றென்றும் நினைவில்!!!...

மனம் துடிக்கும் உன் ரீங்காரக் குரலோசையில்!
தினம் ஏங்கும் அந்நிறைவேறா
ஆசையில்!
உன்னருகில் நான், மொழி இருந்தும் ஊமையானேன்!
உயிர் இருந்தும் உதிரம், உறைந்தே போனேன்!
விதி விளையாடும் மைதானமே
நான்!
இச்சதி விளக்காது உன்முன் கைதாகிறேன் நான்!!!

-


28 MAR 2022 AT 22:05

முற்றுப்புள்ளி!!!...

நிலவே நான் நிலைகுலைந்து
நின்றேன்
நிகழ்ந்தவை யாவும் கனவாய் மாற!
கனவே நான் கைகூப்பி கேட்கிறேன்
அக்கனவுகள் நானும் மறந்தே போக!
விடைபெற்ற விண்மீனே உன்னால்
விண்ணுலகம் வருந்தியதே இந்நாள்!
என்னுலகும் சிதறியதே தன்னால்
மறவேனோ என்வாழ்வின் கருப்பு
நன்னாள் !.

-


5 MAR 2022 AT 19:23

க க க போ !!!!.....

உன்னைக் கண்டவுடன்
கரைபுரண்டேன்!
உன் கண்களால் நிலைகுலைந்தேன்!
என் கண்படுமென தலைகுனிந்தேன்!
உன் கண்ணெதிரே மனமுடைந்தேன்!
காலமெல்லாம் கனவில் கதைத்தேன் !
அவை யாவும் கனவுடனே முடித்துக்
கொண்டேன் !
நான் செய்தது தவறா? பாவமா ?
இதற்கு நிமிடமெல்லாம் சாபமா !...

-


26 FEB 2022 AT 22:56

நட்பு!!!..

விலகிடுமோ என்ற எண்ணத்தினால்

வந்த மௌனத்தின் விளைவு !

விலகலையே விளைவாய்

விதைக்கும் !.

-


23 FEB 2022 AT 23:09

அன்புள்ள அனேகன்!!.

கவிதை அறியாக் கவண் இவன்
உன் கண்களால் கற்றுக் கொண்டவன்!

தேவதை காணாத் தேவன் இவன்
உன் உருவம் கண்டு உறைந்தவன்!

வலிகள் அறியா வாலி இவன்
உன் பிரிவைக் கண்டு உடைந்தவன் !

யோகம் இல்லா போகன் இவன்
உன் வெறுமை எண்ணிச்
சிதைந்தவன்!!.

-


18 FEB 2022 AT 0:09

முதல் நீ ! முடிவும் நீ !

காலம் தந்த கனவுகள் நீ !
என் ஆழமான நினைவிலும் நீ !
என் தேடல் தந்த விளைவுகள் நீ !
உன் ஊடல் தந்த கொடுமையிலும் நீ !
என் மனதில் மலரும் கவிதைகள் நீ !
அதை ஏட்டில் ஏற்றும் சொற்களும் நீ!
நான் கொஞ்சத் துடிக்கும் மழலை நீ !
என்னைக் கெஞ்சவைக்கும்
விடலையும் நீ !
என் வாழ்வின் சிறந்த நிகழ்வுகள் நீ !
என் முதலும் நீ ! என் முடிவிலும் நீ !.— % &

-


Fetching Srinivasan Mahalingam Quotes