Sowmya Sathyanarayanan  
82 Followers · 46 Following

Joined 7 March 2018


Joined 7 March 2018
6 MAY 2020 AT 12:46

அறுவத்து மூவராம் நாயன்மார்கள்

அகிலத்தில் உதித்தனரே
ஆவுடையானைப் போற்ற
இன்னல்கள் பல சந்தித்து
ஈன்றெடுத்தனரே பாடல்கள்
உதித்தாரே சிவபெருமானும் உமையாளுடன்
ஊராரின் ஊகங்களும் பொய்த்தனவே
எக்கணமும் எம்பெருமானாம்
ஏகாம்பரேஸ்வரனைப் பாடி
ஐயங்கள் பல தீர்த்த
ஒன்றல்ல இரண்டல்ல பாடல் வரிகள்
ஓதுவீரே சிவ துதிகளை
ஔடதமாம் எந்நோய்க்கும்
அஃதிலாது துணையேதும் வேறில்லை!!

-


15 APR 2020 AT 23:43

The city in lockdown
Gets back its crown
The birds building their nests
Without any fear of pests
The flowers falling on the ground
Dance together like a merry go round
The trees exhibiting their talent in pride
Without any contaminated oxide
The squirrels, jumping in joy
Monkeys hopping miles and miles
Every creation enjoying their home in the open nature
While the humans in the closed walls called home
The city in lockdown
Gets back its crown!!



-


25 NOV 2019 AT 23:59

மதியும் மணியும் இணைந்த இசையால்
செவிகளுக்கு படைத்தனரே தேனருவியாய்
சாதனைகள் பல செய்தார்களே ஊரார் வியக்க
வாரி வழங்கிய கலைவாணியும் கர்வம் கொண்டாளோ மெய் சிலிர்க்க!!

-


2 OCT 2019 AT 3:00

மனதில் ஆசை ஆசையாய் தேக்கி வைத்த எதிர்பார்ப்புகளும் உதிர்ந்தன.
ஆனால் வாழ்வென்னும் வேர் உள்ள வரை நம்பிக்கை என்னும் இலை துளிர்விட தவறுவதில்லை!!

-


12 JUL 2019 AT 23:05

ஏழேழு அதன் அர்த்தங்களோ ஏழேழு கோடி!!

-


16 JUN 2019 AT 23:39

என் அப்பா சோர்வடைந்து
எனக்கு நினைவில் இல்லை
என் அப்பா மனம் தளர்ந்து
அப்பாவின் விடாமுயற்சியும் கருணையும் தயாளமும்
மறக்கலாகுமோ எதிரியே நினைத்தாலும் கூட!!!

-


11 JUN 2019 AT 23:28

இராமனின் கைப்பற்றிய பாலசீதையாய்
அன்பே மூலதனமாய்
வாழ்வின் ஆதாரமாய்
ஊராரும் உற்றாரும்
வியக்க ஒருவருக்கொருவராய் ஒருவருக்காக ஒருவராய் ஒருவருக்கேற்ற ஒருவராய் இருவுருவத்தில் ஒருவராய் வாழ்ந்து ஓருருவத்தில் ஈருயிராய்க் கழித்துச் சென்றாய்!!!

-


11 JUN 2019 AT 15:31

Give up yourself....
Hold your love with pride and head held high!!
The journey for your love will show you the beauty of life!!!

-


11 JUN 2019 AT 15:20

கிளையிலிருந்து விடுபட்ட நாள் முதலாய்
தேடலும் முடிவதாய் தெரியவில்லையே
வேரினை நோக்கிய என் பயணம்!!!

-


10 JUN 2019 AT 23:09

மேகமாய் மிதந்தாலும்
காற்றாய்ப் பறந்தாலும்
அன்பாய் வாரி யணைப்பதோ நம் பூமித்தாயே!!!

-


Fetching Sowmya Sathyanarayanan Quotes