கவிதை வற்றாதடி என் நெஞ்சில் கவிதை வற்றாதடி ! கருப்பொருளாய் நீ இருந்து கவிதை தினம் சொல்லயில கவிதை வற்றாதடி என் நெஞ்சில் கவிதை வற்றாதடி ! தீராத தாகம் நீ! தெவிட்டாத தித்திப்பு நீ! வற்றாத சுரப்பு நீ! வாழ்க்கையின் பிடிப்பு நீ! எழுத எழுத குறையாத இதயத்தின் சுரப்பி நீ! என் இதய மை ஆக நீ இருக்க எழுதும் பேனா நான் இருக்க கவிதை வற்றாதடி என் நெஞ்சில் கவிதை வற்றாதடி !