நகர்ந்து கொண்டே இரு
ஓடிக்கொண்டே இருக்கும்
நதிகள் என்றும் தோற்றதேயில்லை
ஏன் நீ துவண்டு போகிறாய்.....
விழுந்து போவதெல்லாம்
வீழ்ந்து போவதில் சேர்வதில்லை
எழுந்து நிற்பதே
வென்று முடிப்பதின் தொடக்கம் ......
நீ நீயாகவே இரு
ஒரு போதும் முகமூடிக்குள்
சிக்கி கொள்ளாதே .......
விதவிதமாய் முகம் மாற்றி
நொடிக்கொரு முகம் காட்டும் இவ்வுலகம்
முடிந்த வரையில் நீ சுயம் இழக்காதே
பிறர் நலம் பேண மறக்கதே ....
மாற்றங்கள் உன்னை மாற்றிட விடாதே
மறந்தும் நீ தோற்றதாய் எண்ணாதே...
கல்லாய் போன மனிதனிடம்
கருணை நீ பார்க்காதே
கருணை தேடும் மனிதனிடம்
கடவுள் காண மறக்காதே.....
மூச்சு விடுவதில் உள்ளதோ உயிர்
இல்லை இல்லை நீ
முயற்சி செய்வதில் தான் உள்ளது...
நொடிகள் மீது அடிகள் வை
நிமிடங்கள் உன்னை உயரச் சேர்க்கும்....
-