இயற்கையே கடவுள்!
வலி தரும் மானுட உலகிலிருந்து
விடைபெற வரம் ஒன்று கேட்கிறேன்!
பெரிதாக ஒன்றும் இல்லை
நிம்மதி என்னும் சொல்லை மட்டுமே யாசிக்கிறேன்!
பறக்கும் இப்பட்டாம்பூச்சியின் சிறகாய் மாற
ஏனோ மனம் யோசிக்கிறதே!
மனதோடு தோன்றிய ஏக்கம் நிறைவேறும்
நாள்தான் எதுவோ!-
Ardent devotee of Nature🌫️🌃
Believes that at any cost life has
to move on....... read more
காப்பான் - இயற்கையே கடவுள்!
நெடுந்தொலைவு பயணத்தில் என் சிறு மனம் அதில் தனித்திருந்த பொழுது,
என் கைப்பிடித்து வந்த வழித்துணையும் நீயன்றோ!
ஓடிய ஓட்டத்தில் என் கால்கள் வழுவிழந்து நின்றபொழுது,
கணநேரம் என் காப்பானாய் வந்ததும் நீயன்றோ!
இன்னிசை ராகமெழுப்பி இயலோடு நற்கவியை நான் தொடுக்கையிலே,
என் நாவிலே வந்து உதித்த நற்கவியும் நீயன்றோ!
வேடவன் நீ வீழ்த்த எய்த அம்பு என்னை நெஞ்சில் தாக்கையிலே,
அந்த அம்பின் வழி என் மனதை வென்றவனும் நீயன்றோ!-
Thousand hurdles hold us
behind bars - still
our hearts beats together!-
ஒற்றை மரம்!
இருளோடு வானம் ஜதியாக சேரும் நேரம்,
கலடோடு ஞாயிறும் குறும்பாய் கூடிடும் கண்ணே!
ஒற்றையாய் தனித்து நீ நின்ற கோலம்,
அதை கண்ட நிலவும் பெருமூச்சு கொள்ளுதே கண்ணே!
உன் வாழ்வில் வண்ணம் சேர்க்கும் விதம்,
அந்த ஆதவனும் அழகாய் ஒளித்திட்டான் கண்ணே!
அந்த நிலவுமகளும் உன் இணை சேர துடிக்கும் பதம்,
அந்த காரிருளும் தானாக உன்னைவிட்டு விலகிடும் கண்ணே!-
பிறை நிலவு!
கார்மேக கண்ணன் அவனின் கைக்குள் நீ சிறைவாசியோ,
உன் பிறை சிரிப்பில் அவனும் உன்னுள் அழகாய் தொலைந்தானே;
உனை தாங்கும் மடியாய் அவனிருக்க,
அவனுக்காய் ஏங்கும் மலராய் நீ இருக்க,
சந்தத்தோடு கவியாய் நீ அவனுடன் சேரும் நேரம்
உங்கள் இருவரின் சங்கமத்தை காண நானும் வந்தேனே;
ராவோடு அவனோடு வாராயே,
அவன் இறுமை நீக்கி வெளிச்சம் தாராயே,
பின் ஏனோ பிரிவிதுயரை தந்து அவனை பாதியில் நீங்கி செல்கிறாய் என் பிறை நிலவே!-
The sky holds those wavy clouds;
And drizzle world eventually!
You my dear! drizzle us all with bliss
And holds us heartily:
Distance won't be a hinder for us,
The memories last forever!
The day comes here:
The day my little frozen princess bloom'd!
Happy Birthday dr 🙂💐-