என் விருப்பம் என்னவென்று தெரிந்தும் ...
உன் விருப்பம் என்னவென்று கேட்கின்றாயே...
இந்த வினாவைத்தான் இப்பொழுது உன்னிடமிருந்து
நான் விரும்பவில்லை...-
ஒவ்வொரு அன்பில் இருந்தும் விடைபெறும் பொழுதும்..!
என் கரங்களை பார்த்து
நானே கூறிக்கொள்வது...
உன்னை இறுகப் பற்றி பயணிக்கிறார்களே தவிர..!
உன்னோடு இறுதிவரை யாரும் பயணிக்க மாட்டார்கள் போல...🥺-
உங்களை தேடுபவர்களை
தொலைத்து விடாதீர்கள்...
நீங்கள் தேடுபவர்கள்
எப்பொழுதோ உங்களை
தொலைத்து விட்டார்கள்
புரியவில்லையா இன்னும் அது...-
ஏமாற்ற கற்றுக் கொண்டேன்...
யாரையும் அல்ல ..!
என் இதயத்தை...
நிச்சயம் அவன் வருவான்
எனக் கூறியே...-
உங்கள தேடி தேடி வருவதினால்
அலட்சியமாக பார்க்கிறீர்களா...
அப்படி ஒரு முறை தான் நடக்கும்.. !
மறுமுறை நீங்கள் தேட
நான் தொலைவேன்..!
அதே காரணத்தை கூறி...-
வலி நிறைந்த அவன் வாழ்க்கை புத்தகத்தை முதல்முறையாக வாசிக்கத் தொடங்கி
அவனின் முதல் வாசகி
நான் தான் ...🥰😍😘-
பல ஆயிரம் ஆயிரம் கவிதைகள்
எழுதிய கரம் இது...
ஆனால் இன்று ஒரு வரியை கூட
எழுத முடியாமல்..!
பேனாவின் முனையை பிடித்தவாறு
நகர மறுக்கிறது ...
இதற்கு மேல் என்ன இருக்கிறது அவர்களை பற்றி எழுத..!
அதுதான் விட்டு சென்று விட்டார்களே...-
உன்னை அணைத்தபடி
அருகினில் வாழ ஆசைப்பட்டேன்... ஆனால், உன்னை நினைத்தபடி தொலைவினில் அல்லவா ...
வாழ வைத்து விட்டது
இந்த காதல்...💞-
நான் தேடும் போது
கிடைக்காத அந்த அன்பு..!
நான் வாடும் போது
கிடைக்காத அந்த அன்பு..!
பிறகு உன்னிடமிருந்து
எனக்கு தெவிட்ட ...தெவிட்ட ...
கிடைத்தாலும் தேவையே இல்லை.. எடுத்து செல் உன் அன்பை நீயே...-
உன்னோடு வாழ்ந்த
நினைவுகளை மட்டும் அல்ல..! நிமிடங்களையும் சேமித்து வைத்திருக்கிறேன்...
உனக்கே தெரியாமல் புகைப்படங்களாக.-