சத்தமாக அழ முடியவில்லை
உன் நினைவுகள் மொத்தமாக
என் இதயத்தை அழுத்திக் கொண்டிருப்பதால் .-
அவளுக்கு யாரும் தேவையில்லை..!
நான் மட்டும் போதும்...
என காதல் மட்டும் போதும்...
என வாழ்ந்து கொண்டிருக்கிறாள்..! அவளுக்கு கிடைக்காத
என்னை நினைத்தவாறு...-
மலரே...
உன் மீது சற்று கோபம் எனக்கு..!
அவள் கரங்கள்...
என்னை பற்றுவதற்கு பதிலாக
உன்னை பற்றி கொண்டிருப்பதால்.-
உன் நினைவுகளை நிரந்தரமாக
அழிக்க கூடிய ஆயுதத்திற்கு
நான் எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்க தயார் ஆனால் கிடைக்குமா என்பது தானே இங்கு கேள்வி..?-
பிடித்ததால் தான் நிற்கிறேன்..! பிடிவாதமாக கேட்கிறேன்
எனக்கு நீ வேண்டும் என்று...-
அவர்கள் அழைக்கும் பொழுதே
பதில் அளித்து விடுங்கள்...
நீங்கள் அழைக்கும் பொழுது
உங்களுக்கான நேரம்
அவர்களிடம் இல்லாமல் கூட போகலாம்.-
உன்னை காணவில்லை
என நான் தேடவில்லை..!
என்னை தொலைத்து விட்டேன் உன்னில்அதனால் தான் தேடுகிறேன்.-
இப்பொழுதெல்லாம்
அவன் என்னோட
அடிக்கடி சண்டை இடுக்கிறான்..!
எப்படி எல்லாம் என்னை
சமாதானம் செய்யலாம்
என கற்றுக் கொண்டதால்.-
அர்த்தமற்ற ஆயிரம்
வார்த்தைகளை
பேசுவதற்கு பதிலாக...
அமைதியான மௌனம்
அகச்சிறந்தது...-
எல்லை மீறி
ஏக்கம் கொண்டு
ஏங்கி தவிக்கிறது
என் இதயம்..!
என் காதலை
ஏற்றுக்கொள்ள மறுக்கும்
உன் இதயத்தை நினைத்து.-