நாடித் துடிப்பறிஞ்சு,
நாவில் தனித்த புளிப்பறிஞ்சு,
நீ தங்கிய தருணம் முதல்
திசுத்திரல் செல்லும் திசையெங்கும் உன்நலன் கசிச்சு,
உன் குறிப்பறிஞ்ச பூரிப்பிலென்
மார்சுரக்கத் தயார்செஞ்சு,
மசக்கையின் மயக்கமிகுதியிலும்
தாளாம உனக்காதலிச்சு,
காணாம உள்ளிருந்த உன்ன
கையிலெடுக்கும் காலம்வர
காலோ தரைபடல!!
காத்தான மனம் பிடிபடல!!
-சேது மெய்யப்பன்
-