Senthil   (செங்கவி🖋️)
170 Followers · 54 Following

read more
Joined 24 October 2017


read more
Joined 24 October 2017
16 MAR AT 13:40

பாரிஜாதம்.

அங்கும் இங்குமாக
ஓடி திரிந்து
ஒற்றை பார்வையில்
என்னை
சிறைபிடித்தவளுக்கு
தெரியவில்லை
நாம் புகைப்படத்தில்
சிக்கிக்கொண்டோமே
என்று..☺️

பகலிலும் பூக்கின்ற
பாரிஜாத மலர் இவள்..
குறுநகையால் கொஞ்சி
பேசிடும் சின்ன
பூங்குழல்..
எங்கள் வீட்டு
சுட்டி கண்ணம்மா♥️

-


11 JAN AT 17:06

ஒட்டிய உறவுகள்
பிரிந்து.. பிரிந்து..
பிறகொருநாளில்
உயிர் பிரிவது தான்
வாழ்க்கையோ..!
பிரிவென்னும் வலியை
தாங்கிக்கொள்கிற வரம்
ஒன்று கிடைத்தப்பின்
பிறகென்ன வரம் கேட்பேன்
இறைவா உன்னிடத்தில்..?

-


1 NOV 2024 AT 15:28


செங்கவி #100

தமிழுக்கும் தமிழ் அன்னைக்கும் 🙏

கவிதை எழுத பழகிய நாட்களில் செங்கவியும் பொன்மொழியும் என்கிற தலைப்பில் கவிதை தொகுப்பாக புத்தகம் எழுதிட ஆசை இருந்தது பொருளாதார சூழல் காரணமாகவே அந்த எண்ணம் கைவிடப்பட்டது, எனினும் yourquote தளத்தில் செங்கவி என்கிற புணை பெயரிலாவது எழுதுவோம் என்று ஆரம்பித்த கவிப்பயணம் இன்று 100ஐ கடந்திருப்பதில் மகிழ்ச்சி.சக கவிஞர்களுக்கும் நல்லதொர் கவிப்பயணம் அமைந்து உற்ற அங்கீகாரம் கிடைக்கட்டும்.

-


1 NOV 2024 AT 14:42

டியர் டேடா

-


1 NOV 2024 AT 13:24

Paid Content

-


1 NOV 2024 AT 1:07

ஓயாத மழையில் பிரிந்த
ஒற்றை சாரல் துளியின்
தீராத தவிப்பு எப்படியோ..
அப்படியான இவரது எழுத்துக்களை
என் சொல்வேன்?..

தாளாத தனிமையில் தவம்
செய்திடும் தனிமரம் ஒன்றை
தடம் புறண்ட தென்றல் ஒன்று
தலை கோதல் செய்வது போன்ற
இவரது கவி நடையை
என் சொல்வேன்?..

உறைந்திட்ட மனதில்
உதிர்ந்திட்ட உரையாடல்களை
எதார்த்த எழுத்துக்களில்
தருகின்ற தோழி
தீபா வின்
கவிகள் யாவும்
என்றும் என் மனதில் பதிந்த

காதலுக்கும்
காதலனுக்குமான
ஒரு புதிய அத்தியாயம்.

-


31 OCT 2024 AT 4:15

அனைத்து குறுநகையும்
இன்பத்தின்
பிரதிபலிப்பாக
இருக்க முடியாது..
அது வறண்ட
கண்ணீர்க்கடலின்
கரை சேர்ந்த
கடைசி
சிற்றலையாக கூட
இருக்கலாம்..

-


29 OCT 2024 AT 20:01

சொல்லாத சோகங்களை
மெல்லாத மவுனங்களில்
மறைத்துவிட்டேன்..

பொல்லாத பொழுதுகளை
இல்லாத இடைவெளியில்
தனித்துவிட்டேன்..

அடிக்கோடிட்ட
அன்றாட வாழ்வின் பிழைப்பில்.

-


15 FEB 2024 AT 10:06

எவர் ஒருவரையும் மதிப்பிடுவது என்பது, நம்மை நாமே சோதித்துக்கொள்வது போலாகிவிடுகிறது.

-


4 FEB 2024 AT 9:06

கண்மூடித்தனமான கருணை..!

ஆம்..

உடைந்த கண்ணாடி என்பதை அறிந்தும் அதை மீண்டும் உடைக்கிற
கைகளின் செயல்.

-


Fetching Senthil Quotes