காங்கிரஸ் அரசரே
காமாட்சி ராசரே
சிவகாமி புத்திரரே
சினம் காணா தகப்பரே..
படிக்காத மேதையே
படித்தோர்க்கு போதையே
தர்மவீரம் பறைசாற்றிய
கர்மவீர பிரபுவே..
பஞ்சமற்ற குடியாட்சி
லஞ்சமற்ற அரசாட்சி
மனதிலுண்டு மனசாட்சி
மக்களென்றும் அதன்சாட்சி
ஆட்சியென்றால் உனதாட்சி
மீண்டும் வருமா உனதாட்சி..
-