தூரத்திலொரு இசை கேட்கிறது என் நிலைக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒர் இசையாக எனக்கு கேட்கிறது . எழுந்து செல்கிறேன் தேடுகிறேன் இறுதியில் எனை சுற்றிலும் ஆறடி நீளமதில் சுண்ணாம்பு பூசப்பட்ட அடர்காடு... — % &
அவள் மொழியில் சொல்லவேண்டுமெனில் ஆசைஆசையாய் வளர்த்த நகமொன்று எதேட்சையாக எதிலேனும் மோதி உடைந்துபோகையில் விரலிலும் மனதிலும் உருவாகுமே ஒரு வலி . அதுபோல் உயிர் முழுவதும் வலிக்கிறது நீயின்றி...— % &
தெரியுமா கண்மணி!!! பெரும் பிரிவொன்றால் அந்த முட்டாள் தற்கொலைக்கு முயற்சித்துவிட்டானாம் சீ.. இவனையா அவள் காதலித்தாள்? . என முகம்சுழித்து குறைகூறிய அன்று தெரியவில்லை தனைதானே கொன்றிட துணிந்தவனின் வலி...— % &
இறுதியேதும் இல்லாமல் இன்னும் எத்தனை நாள்தான் என்னில் தங்கியிருப்பாய் என்கிறேன் . மெல்லிய புன்னகையில் அதான் அன்றாட வாடகையாக இந்த கவிதைகள் தருகிறேனே போதாதா? என்கிறாள்...— % &
இரவை மீறி விடியலும் வரத்தொடங்கிவிட்டது இன்னமும் விழித்துகொண்டிருக்கிறேன் கண்ணீரின் ஈரம் காயவேயில்லை அதே காதல் அதே குழந்தைதனம் அதே அவள் என . கற்பனையில் அவள் முகம் மாறவேயில்லை கற்பனையில் மட்டும்... — % &
அன்றாடம் நான் அவளை தேடுகிறேன் என உங்களிடம் புலம்புவதுபோல் என்றேனும் ஒருநாள் அவளும் என்னை தேடினாள் என எவரேனும் என்னிடம் சொல்வார்களா? . ஆம் தெரியும் இது பேராசைதான் என்செய்வது? நானும் மனிதன்தானே...— % &