வயது ஏறுவதில்லை,
முதுமை துரத்துவதில்லை,
துன்பம் தலைக்கேறுவதில்லை,
கடந்தவை நம்மை பயமுறுத்துவதில்லை,
வருபவை நம்மை யோசிக்க வைப்பதில்லை,
சிரிப்பதற்கு மட்டுமே கண்கள்,
கண்ணீர் விழுவதற்கில்லை,
கைகள் அணைப்பதற்கு மட்டுமே,
தீயவை செய்வதற்கு இல்லை,
மனம் இந்த நிமிடம்
சிந்திப்பதற்கு மட்டுமே,
நல்லன மட்டுமே கண்கள் அருகில்,
அல்லன விலகி ஓட்டப் படுகின்றன,
இன்ப மின் காந்த அதிர்வு
உன் அருகில் இருந்தால் மட்டுமே,
நான் வணங்கும் போதி மர புத்தனோ
இல்லையே, நீயே எந்தன் அழகு செல்ல
மென்னிலவே.
____சத்ய சாந்தி
-