உனக்காக நாளும்
பூத்திருந்து காத்திருந்தேன்
உந்தன் மகரந்த மடியினில்
தவழ்வே னென்று.-
கண்களில் கன மழை
மின்னலாய் உன் பார்வை
இடித்ததனால்!-
மண்ணில் வந்து பிறந்து
விட்டோமே என்றெண்ணி வாழ்க்கையில்
மணிகளை சிதறாமல்
வாழவே பிறந்திருக்கிறோம்
என்றெண்ணி
நாளும் மணியும்
சிதறாது உழைத்திடுவோம் வீராங்கனையே வா!-
"பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தக்கூடாது என்றாள்" மருமகள்.
ஏன்? என மாமியார் கேட்க, அதற்கு மருமகள் சொன்னாள்,
உங்க பிள்ளைக்கு சமைக்க தெரியும்னு சொன்னீங்க, ஆனா இன்னிக்கு அவர் போட்டுக்கொடுத்த குளம்பியில் அதற்கான இலக்கணம் எதுமே இல்லை...
வெறும் சீனியை அள்ளிகொட்டியிருக்கிறார், ஏன்டா குளம்பி குடிச்சோம்னு ஆயிடுச்சு..
என்ன பையன வளத்து வச்சுருக்கீங்க அத்தை?
-
இருள் நிரந் தரமில்லை என்று
நிறங்கண்ட பொழுது
நீங்கிவிடும் கவலையொன்று
-
ஊரே நீ உறங்கி விட்டாய்
துயிலில் நீ மயங்கிவிட்டாய்
இருளில் நீ மாய்ந்துவிட்டாய்
பொருளின்றி நான் மயங்கிவிட்டேன்
பசியில் தான் வாடிவந்தேன்
புசித்திடவே நான் ஏங்கி நின்றேன்
கிடைத்திடுமா ஒரு கவளமென்று
அருளின்றி நான் திருடிவிட்டேன்
நீதியின் பிடியில் சிக்கிவிட்டேன்
பசியா பாவமா என்றெண்ணி
பசியாலே குற்றம் புரிந்துவிட்டேன்
வழியொன்று வாராதோ
பசியும் தான் செல்லாதோ
இவ்விரவை விரைவாய் கடந்திடவே!-
வான் நிலா
நில்லாமல் சொல்லாமல்
சென்றது
அமாவாசை என்று!-
Throw away the sorrows
Bring in cheerful memories
Listen to divine music
Play your game
Love your family
Hate your laziness
Race your anger
Face the consequences-
I know life has hurdles
For me it's riddles
I will shuffle-
I never used to spit on you
You're my mom ma
How I will Spoil you mother India?-